பதிவு செய்த நாள்
31 ஜூலை2018
23:33
மும்பை : ‘கடந்த 2017 – 18ம் நிதியாண்டில், வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட தொகையில் பாதி, தனிநபர்களால் செய்யப்பட்டதாக இருக்கிறது. இதில், கிராமம், நகரம், பெருநகரம் என, எந்த வித்தியாச முமில்லை’ என, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: வங்கிகளில் செய்யப்பட்ட மொத்த டிபாசிட், 2017 மார்ச் முடிவில், 109.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, இது, 2018, மார்ச் இறுதியில், 117 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில், மொத்த டிபாசிட்டில், நடப்புக் கணக்கு, 9.7 சதவீதம் ; சேமிப்பு கணக்கு, 32.1 சதவீதம்; வைப்பு கணக்கு, 58.2 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, நடப்பு மற்றும் வைப்பு கணக்குகளை விட, சேமிப்பு கணக்கில் டிபாசிட் செய்வது அதிகரித்துள்ளது. மொத்த டிபாசிட் வளர்ச்சி விகிதத்தை விட, வெளிநாடு வாழ் இந்தியர்களின் டிபாசிட் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. முந்தைய, 2016- – 17ம் நிதியாண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில், டிபாசிட் தொகையை திரும்பப் பெற்றனர்.
தொடர்ந்து டிபாசிட் செய்வதில், மூன்றில் இரண்டு பங்கை, வீட்டுச் சேமிப்பு பிரிவு கொண்டுள்ளது. அடுத்த இடங்களை, வெளிநாடுகள் மற்றும் நிதித் துறை டிபாசிட்டுகள் பிடித்துள்ளன. தொடர்ந்து டிபாசிட்டுகளை திரட்டுவதில், தனியார் வங்கிகள், 60 சதவீத பங்களிப்புடன், பிற வங்கிகளை விட, முன்னணியில் உள்ளன.
தனியார் பெருநிறுவனங்கள், தனியார் வங்கிகளில் கணிசமாக டிபாசிட் செய்துள்ளன. வீட்டு சேமிப்பு பிரிவில், அதிக டிபாசிட் திரட்டியதில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதில், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களும், சிறப்பான இடத்தை வகிக்கின்றன.
மொத்த டிபாசிட்டில், மூன்றில் இரு பங்கை, மஹாராஷ்டிரா, டில்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத், கேரளா ஆகிய எட்டு மாநிலங்கள் திரட்டி உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|