பதிவு செய்த நாள்
31 ஜூலை2018
23:33
புதுடில்லி : துாத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், நாட்டிற்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.ராம்நாத் கூறியதாவது: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தாமிரம் உற்பத்தி குறைந்துள்ளது. அதனால், தாமிரம் இறக்குமதி செலவினம், 200 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி தடைபட்டுள்ளதால், 150 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில், நாட்டின் பொருளாதாரம், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை, ஆண்டுக்கு, 2.50 லட்சம் டன் தாமிரத்தை, உள்நாட்டு தேவைக்கு அளித்து வந்தது. தற்போது, பெரும்பான்மை நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து, தாமிரத்தை இறக்குமதி செய்து வருகின்றன. நிறுவனம், ஆண்டுக்கு, 1.5 -– 1.60 லட்சம் டன் தாமிரத்தை, ஏற்றுமதி செய்து வந்தது. அத்துடன், கந்தக அமிலம், பாஸ்போரிக் அமிலம் ஆகியவற்றையும் தயாரித்து வந்தது.
ஆலை மூடப்பட்டதால், தற்போது இந்த அமிலங்களின் விலை அதிகரித்துள்ளன. ஒரு டன், 4,000 ரூபாய்க்கு விற்பனையான கந்தக அமிலம், தற்போது, 15 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. பாஸ்போரிக் அமிலம் விலை, 20 – -25 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|