பதிவு செய்த நாள்
31 ஜூலை2018
23:34
குன்னுார் : லாரிகள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால், குன்னுார் ‘டீசர்வ்’ தேயிலை ஏலத்தில், வரத்தும், விற்பனையும் அதிகரித்து, விலையும் ஏற்றம் கண்டது.
நீலகிரி மாவட்டத்தில், 16 கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலை துாள், குன்னுார் ‘டீசர்வ்’ மையத்தில் ஏலம் விடப்படுகிறது.
சராசரி விலை :
சமீபத்தில் நடந்த, 30வது ஏலத்தில், இலை ரகம், 2 லட்சத்து, 590 கிலோ, டஸ்ட் ரகம், 2 லட்சத்து, 4,779 கிலோ, என, 4 லட்சத்து, 53 ஆயிரத்து 369 கிலோ விற்பனைக்கு வந்தது. இதில், 3 லட்சத்து, 77 ஆயிரத்து, 645 கிலோ விற்பனையானது. சராசரி விலையாக, 65.66 ரூபாய் கிடைத்தது; கடந்த ஏலத்தை விட, ஒரு ரூபாய் விலை ஏற்றம் கண்டது. இலை ரகத்தில், 93 சதவீதம் விற்பனையாகி, ஒரு கோடியே, 21 லட்சத்து, 38 ஆயிரத்து, 112 ரூபாய் கிடைத்தது.
அதிகபட்சமாக, 26 ஆயிரத்து, 20 கிலோ விற்பனைக்கு வந்த, பந்தலுார் தொழிற்சாலையின் தேயிலை துாள், 60.21 சதவீதம் விற்பனையானது; சராசரி விலை, 77 ரூபாய் கிடைத்தது. ‘டஸ்ட்’ ரகத்தில், 92.62 சதவீதம் விற்பனையாகிய நிலையில், ஒரு கோடியே, 26 லட்சத்து, 56 ஆயிரத்து, 499 ரூபாய் கிடைத்தது. அதிகபட்சமாக, கூடலுார் சாலீஸ்பெரி தொழிற்சாலையில் இருந்து, 27 ஆயிரத்து, 890 கிலோ தேயிலை துாள் ஏலத்துக்கு வந்தது. அதில், 98.71 சதவீதம் விற்பனையானது. சராசரி விலையும், 76.88 ரூபாய் கிடைத்தது.
அதிகரிப்பு :
கடந்த வார ஏலத்தில், ஒரு கோடியே, 99 லட்சத்து, 85 ஆயிரத்து, 333 ரூபாய் மதிப்பில் தேயிலை துாள் விற்பனையான நிலையில், இந்த வாரம், 2 கோடியே, 47 லட்சத்து, 94 ஆயிரத்து, 611 ரூபாய்க்கு விற்பனையானது. வர்த்தகர்கள் சிலர் கூறுகையில், ‘லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் ஆன நிலையில், தேயிலைக்கு சந்தையில் கிராக்கி ஏற்பட்டது. வரத்தும், விற்பனையும் அதிகரித்ததுடன், கடந்த ஏலத்தை விட, மொத்த வருவாயும் அதிகரித்தது’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|