பதிவு செய்த நாள்
02 ஆக2018
00:01
திருப்பூர்:ரிசர்வ் வங்கியின், ‘ரெப்போ’ வட்டி விகிதம் உயர்வு அறிவிப்பு, ஆடை ஏற்றுமதி துறையினரை கவலையடையச் செய்துள்ளது.நடப்பு நிதியாண்டுக்கான மூன்றாவது நிதிக் கொள்கையை, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் நேற்று வெளியிட்டார். இதில், ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி, 6.50 சதவீதமாகஉயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பால்,வங்கிகள் வழங்கும் பல்வேறு வகை கடனுக்கான வட்டியும் அதிகரிக்கும். எனவே, இந்த அறிவிப்பு, திருப்பூர் பின்னலாடை துறையினரை கவலையடையச் செய்துள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜாசண்முகம் கூறியதாவது:ஜூன் மாதம், 0.25; தற்போது மீண்டும், 0.25 சதவீதம் என, நடப்பாண்டில் மட்டும், ரெப்போ வட்டி விகிதம், 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.இந்த வட்டி உயர்வை, வங்கிகள், ஏற்றுமதியாளர்கள் உட்பட தங்கள் வாடிக்கையாளர்கள் மீதே திணிக்கும். வட்டி விகிதம் அதிகரிப்பு, தொழில் துறையை மேலும் பாதிப்படையச் செய்யும். ரெப்போ வட்டி அதிகரித்தாலும், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை, வங்கிகள் அதிகரிக்கக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணைத் தலைவர் சக்திவேல் கூறியதாவது:ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு, ஆடை உற்பத்தி துறையில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ரிசர்வ் வங்கி, தன் நிதி கொள்கையில், ஏற்றுமதிக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தி அறிவிக்க வேண்டும். ஏற்றுமதியை பாதிக்காதவாறு, ரிசர்வ் வங்கி, துரிதமாக அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|