பதிவு செய்த நாள்
02 ஆக2018
00:02
புதுடில்லி:கடந்த ஜூலை மாதம், ஜி.எஸ்.டி., வாயிலான வருவாய், 96 ஆயிரத்து, 483 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
‘ஜி.எஸ்.டி.ஆர்., – 3பி’ படிவத்தில் விற்பனை கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை, 64.69 லட்சத்தில் இருந்து, 66 லட்சமாக அதிகரித்துள்ளது. ஜூலையில் திரட்டப்பட்ட ஜி.எஸ்.டி.,யில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 15 ஆயிரத்து, 877 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
மாநில அரசின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 22 ஆயிரத்து, 293 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மாநிலங்கள் இடையிலான விற்பனைக்கு, மத்திய அரசு வசூலிக்கும், ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 49 ஆயிரத்து, 951 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது. கூடுதல் வரி வாயிலாக, 8,362 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., வசூல், எதிர்பார்த்த அளவிற்கு உள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தாண்டு, ஜி.எஸ்.டி., மூலம், ஜனவரி, 86 ஆயிரத்து, 318 கோடி; பிப்ரவரி, 85 ஆயிரம் கோடி; மார்ச், 89 ஆயிரத்து, 264 கோடி; ஏப்ரல், 1,03,458 கோடி; மே, 94 ஆயிரத்து, 16 கோடி; ஜூன், 95 ஆயிரத்து, 610 கோடி மற்றும் ஜூலையில், 96 ஆயிரத்து, 483 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|