ஜூலையில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.96,483 கோடியாக உயர்வுஜூலையில் ஜி.எஸ்.டி., வசூல் ரூ.96,483 கோடியாக உயர்வு ...  மிதமான வளர்ச்சியில் தயாரிப்பு துறை  புதிய, ‘ஆர்டர்’கள், உற்பத்தி, வேலைவாய்ப்பு உயர்வு மிதமான வளர்ச்சியில் தயாரிப்பு துறை புதிய, ‘ஆர்டர்’கள், உற்பத்தி, ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘ரெப்போ’ வட்டி மீண்டும் உயர்வு பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2018
00:05

மும்பை:பொரு­ளா­தார வல்­லு­னர்­கள் கணித்­த­படி, ரிசர்வ் வங்கி, வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான, ‘ரெப்போ’ வட்டி விகி­தத்தை, இரண்டு மாதங்­களில், மீண்­டும் உயர்த்­தி­யுள்­ளது.
மும்­பை­யில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்­னர், உர்ஜித் படேல் தலை­மை­யில், நிதி கொள்கை குழு கூட்­டம் நடை­பெற்­றது. இதை­ய­டுத்து, ரிசர்வ் வங்கி வெளி­யிட்ட அறிக்கை:வங்­கி­க­ளுக்கு வழங்­கும் குறு­கிய கால கட­னுக்­கான ரெப்போ வட்டி, 0.25 சத­வீ­தம் உயர்த்­தப்­பட்டு, 6.50 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.வங்­கி­க­ளி­டம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் கட­னுக்­கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி, 6 சத­வீ­தத்­தில் இருந்து, 6.25 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.
ஜூலை – செப்., வரை, சில்­லரை பண­வீக்­கம், 4.2 சத­வீ­த­மா­க­வும், அக்., – மார்ச் வரை­யி­லான அரை­யாண்­டில், 4.8 சத­வீ­த­மா­க­வும் இருக்­கும்.நடப்பு, 2018 -– 19ம் நிதி­யாண்­டில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 7.4 சத­வீ­தம்; இரண்­டா­வது அரை­யாண்­டில், 7.5 – 7.6 சத­வீ­தம் என்ற மதிப்பீட்டில் மாற்­ற­மில்லை.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.
கடந்த, 2014, மே மாதம், பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான மத்திய அரசு அமைந்த பின், ரிசர்வ் வங்கி, முதன் முறை­யாக, இந்­தாண்டு ஜூன் 6ல், ரெப்போ வட்­டியை, 0.25 சத­வீ­தம் உயர்த்­தி­யது குறிப்­பி­டத்­தக்­கது.ரெப்போ வட்டி உயர்வால், வீடு, வாகன கடன்­க­ளுக்­கான வட்டி உய­ரும்.அதே­ச­ம­யம், டிபா­சிட்­டிற்­கான வட்­டி­யும் அதிகரிக்­கும். நேற்று முன்­தி­னம், எஸ்.பி.ஐ., சில வகை டிபா­சிட்­டு­களுக்கு, வட்டியை உயர்த்தி உள்ளது.
வளர்ச்சி அறிகுறி
கடந்த மே மாதம், 4.87 சத­வீ­த­மாக இருந்த சில்லரை பண­வீக்­கம், ஜூனில், 5 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. தொடர்ந்து மூன்று மாதங்­க­ளாக, சில்­லரை பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ளது. அதே­ச­ம­யம், சில சாதக­மான அறி­கு­றி­களும் தென்­ப­டு­கின்­றன.கடந்த காலாண்­டில், வாகன விற்­பனை உயர்ந்­துள்­ளது. கிரா­மப்­பு­றங்­களில் தேவைப்­பாடு அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்­கான அறி­கு­றி­கள் தோன்­றி­யுள்­ளன. உள்­நாட்டு நில­வ­ரத்­து­டன், சர்­வ­தேச சூழ­லை­யும் ரிசர்வ் வங்கி உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கிறது என, ‘ஈக்­யுட்டி – 99’ நிறு­வ­னர், சுமித் பில்­க­யான் தெரி­வித்­துள்­ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)