பதிவு செய்த நாள்
04 ஆக2018
00:16
புதுடில்லி:‘இந்தியாவில், பெரும்பான்மையான குடும்ப நிறுவனங்களிடம், அடுத்து, நிர்வாகத்தை யார் வழிநடத்துவது என்பது குறித்த திட்டம் ஏதும் இல்லை’ என, பி.ஏ.எப்., கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கை:உலகளவில், சீனா, 167 குடும்ப நிறுவனங்களுடன், முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில், 121 குடும்ப நிறுவனங்கள் உள்ளன. மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு, பங்குச் சந்தை பட்டியலில், 108 குடும்ப நிறுவனங்கள் உள்ளன.
இந்தியாவில், தற்போது குடும்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்புக்கு, மகள் மற்றும் மனைவியை சேர்ப்பது அதிகரித்துள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவில், இத்தகைய போக்கு அதிகமாக காணப்படுகிறது.இந்திய குடும்ப நிறுவனங்களில், 97 சதவீதம், அடுத்த நிர்வாகப் பொறுப்பை யாருக்கு வழங்குவது என்பதை முடிவு செய்யாமல் உள்ளன.
குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், தாங்கள் வகிக்கும் நிர்வாகப் பொறுப்பை, வாரிசுகளுக்கு வழங்க மனமில்லாமல் உள்ளனர். இதன் காரணமாக, குடும்ப நிறுவனங்களில் பூசல் எழுகிறது.இத்தகைய சூழலில், சுமுக தீர்வுக்கு, குடும்ப வர்த்தக ஆலோசனை நிறுவனங்களின் பங்கு, இன்றியமையாததாக உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|