பதிவு செய்த நாள்
04 ஆக2018
00:58
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை, தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. தேவைப்பாடு அதிகரித்ததால், ஜூலையில், சேவைகள் துறை, 22 மாதங்களில் காணாத வளர்ச்சி வேகத்தை கண்டுள்ளது.
இது குறித்து, நிக்கி – மார்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சேவைத் துறை நிறுவனங்களுக்கு, 2017, ஜூன் முதல் அதிக அளவில் புதிய, ‘ஆர்டர்’கள் கிடைத்து வருகின்றன. இதன் காரணமாக, ஒட்டுமொத்த சேவைகள் துறை, கடந்த ஜூலையில், வலுவான வளர்ச்சியை, கண்டுள்ளது.
அதன் அடிப்படையில், சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும், நிக்கி, ஐ.எஸ்.பி.ஏ.ஐ., குறியீடு, ஜூலையில், 54.2 புள்ளியாக உயர்ந்துள்ளது. இது, ஜூன் மாதம், 52.6 புள்ளியாக இருந்தது.
சேவைகள் துறை, 2016 அக்டோபருக்கு பின், கடந்த ஜூலையில், அதிகபட்ச வளர்ச்சியை கண்டு உள்ளது.மூலப்பொருட்கள்இக்குறியீடு, 50 புள்ளியை தாண்டினால், வளர்ச்சியாக கருதப்படும்.இந்தாண்டு, ஜனவரி, மே ஆகிய மாதங்களில் மட்டுமே, சேவைகள் துறை வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜூன், ஜூலை மாதங்களில், சேவைகள் துறை, தொடர்ந்து வளர்ச்சி கண்டிருப்பதற்கு, தேவைப்பாடு பெருகியிருப்பதும், புதிய ஆர்டர்கள் அதிகம்குவிந்ததும் காரணம் எனலாம். இதையொட்டி, சேவை நிறுவனங்கள், ஊழியர்களை அதிக அளவில் நியமித்து, பணிகளை முடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
அதேசமயம், இந்நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொடர்ந்து சுமையாகவே இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தாண்டு மார்ச் முதல், சேவை துறை நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் உயர்ந்துள்ளது. இது, ஜூனில், நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருந்த நிலையில், ஜூலையில், சற்று குறைந்துள்ளது.
தயாரிப்பு
ஜூலையில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி விகிதமும் சிறப்பாக இருந்தது. இந்த இரு துறைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சி அடிப்படையிலான, நிக்கி இந்தியா, சி.பி.எம்.ஐ.ஓ.ஐ., குறியீடு, 53.3 புள்ளியாக உயர்ந்துள்ளது. கடந்த, 2016, அக்டோபருக்கு பின், இக்குறியீடு, இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது.
இது, ஜூனில், 53.3 புள்ளி; மே மாதம், 50.4 புள்ளி என்ற அளவில் இருந்தது.தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் பொருளாதாரம், மிக வலிமையாக வளர்ச்சி பெற்று வருவதை இந்த ஆய்வு முடிவுகள் குறிக்கின்றன.
மூலப்பொருட்கள் செலவின உயர்வு, கச்சா எண்ணெய் விலையேற்றம், ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கம் போன்றவற்றால், பணவீக்கம் மேலும் உயரும். அதனால், ரிசர்வ் வங்கி, இந்தாண்டு மீண்டும், ‘ரெப்போ’ வட்டியை உயர்த்த வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|