பதிவு செய்த நாள்
09 ஆக2018
00:16
புதுடில்லி:தேசிய பங்குச் சந்தையின், வெள்ளி விழாவையொட்டி, நேற்று புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் வெளியீட்டு விழா, டில்லியில் நடைபெற்றது.இதில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘நிடி ஆயோக்’ துணை தலைவர் ராஜீவ் குமார் மற்றும் டில்லி லெப்டினன்ட் கவர்னர், அனில் பைஜால் ஆகியோர் பங்கேற்றனர்.
இது குறித்து, தேசிய பங்குச் சந்தை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேசிய பங்குச் சந்தை, 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதையொட்டி, பழைய பழுப்பு நிற சதுர சின்னம் மாற்றப்பட்டுள்ளது.மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு மற்றும் நீல வண்ணங்களுடன், பன்முக வர்த்தகத்தை பிரதிபலிக்கும் புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
தேசிய பங்குச் சந்தை, 1992ல், மும்பையில் துவக்கப்பட்டது. பங்கு வர்த்தகத்தில் மின்னணு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய சிறப்பும், இச்சந்தைக்கு உள்ளது. இந்தியாவில், அதிக லாபத்துடன் செயல்பட்டு வரும் தேசிய பங்குச் சந்தை, சர்வதேச அளவில், 11வது இடத்தில் உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|