பதிவு செய்த நாள்
16 ஆக2018
00:07
சென்னை:டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், அதன் ஸ்கூட்டரான டி.வி.எஸ்., டேஷ் மற்றும் மூன்று சக்கர வாகனமான, டி.வி.எஸ்., கிங் ஆகியவற்றை, நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்துஉள்ளது.
டி.வி.எஸ்., டேஷ், 110 சி.சி., திறன் கொண்ட ஸ்கூட்டராகும். டி.வி.எஸ்., கிங், 200 சி.சி., திறன் கொண்ட மூன்று சக்கர பயணியர் வாகனமாகும்.இது குறித்து, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான, கே.என்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
டி.வி.எஸ்., கிங், டி.வி.எஸ்., டேஷ் ஆகிய வாகனங்கள் மூலம் எங்களது தயாரிப்புகளை விரிவுபடுத்தி உள்ளோம். இந்த வாகனங்களுக்கு, பிலிப்பைன்ஸ் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும் என கருதுகிறோம். குறிப்பாக, வேகமாக வளர்ந்து வரும் சந்தையில், இதற்கு நல்ல வரவேற்பு கிட்டும் என கருதுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2016ம் ஆண்டு முதல், டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனி, பிலிப்பைன்ஸ் நாட்டு சந்தையில் உள்ளது. கூடவே, இதன் தயாரிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|