பதிவு செய்த நாள்
17 ஆக2018
23:24
புதுடில்லி : மத்திய அரசு, உணவு பொட்டல கொள்கையை மறுபரிசீலனை செய்ய, வல்லுனர் குழுவை அமைத்துள்ளது.
ஏப்ரலில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம், பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் உணவு பொருட்கள் குறித்த, வரைவு கொள்கையை வெளியிட்டது. அதில், பொட்டல உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றை எச்சரிக்கும், சிவப்பு சின்னம், பொட்டலத்தின் மீது அச்சிட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அமல்படுத்தினால், விற்பனை பாதிக்கப்படும் என, உணவு பொருட்கள் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிருப்தி :
இந்நிலையில், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன்குமார் கூறியதாவது: ஆணையம் தயாரித்த உணவு பொட்டல வரைவு கொள்கை, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் உள்ள சில அம்சங்கள் குறித்து, பொட்டல உணவு துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதனால், வரைவு கொள்கையை பரிசீலிக்க, தேசிய நுண்ணுாட்டச் சத்து மைய, முன்னாள் இயக்குனர், பி.சசிகரன் தலைமையில், மருத்துவர், நிகில் தாண்டன் உள்ளிட்டோர் அடங்கிய வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, உணவு துறையினரின் கருத்துகளை ஆராய்ந்து, அதன் பரிந்துரைகளை வழங்கும். உணவு பொட்டல ஒழுங்குமுறை கொள்கைப்படி, நுகர்வோர் நலன் பாதிக்காமல், அதேசமயம், எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காமல், சில சிறிய திருத்தங்கள் செய்யப்படலாம். மக்களின் உணவு பழக்கத்தை மாற்றும்படி கூறுவது கடினம். சிலர், சுவைக்காக உண்பர். ஒரு சிலர், ஆரோக்கிய உணவிற்கும், பிற உணவிற்கும் உள்ள வித்தியாசத்தை பொருட்படுத்துவதில்லை.
வல்லுனர் குழு அளிக்கும் பரிந்துரைக்கு, ஒருமித்த ஆதரவு கிடைக்காமல் போனாலும், திட்டமிட்ட படி, உணவு பொட்டல கொள்கை சட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|