பதிவு செய்த நாள்
25 ஆக2018
23:38
சென்னை: அரசு துறைகள், ‘ஆன்லைன்’ வழியே, தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த வன்பொருள் மற்றும் மென்பொருட்களை, கொள்முதல் செய்வதற்கு வசதியாக, ‘எல்காட் இ – மார்க்கெட்’ என்ற, இணைய வழி கொள்முதல் முறை, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.இணைய வழி கொள்முதல் முறையில், அரசு துறைகளுக்கு, தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த வன்பொருள், மென்பொருள் மற்றும் சேவைகளை, இணையதளம் வழியே வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.‘எல்காட்’ நிறுவனத்தில் பதிவு பெற்றுள்ள, விற்பனையாளர்களின் விலைப்பட்டியல், இணையதளத்தில் வழங்கப்பட்டிருக்கும். அரசு துறைகள், இணையதளத்தில் நுழைந்து, தங்கள் துறைக்கு தேவையான பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தும், அதன் விபரங்களை அறிந்தும், பொருட்களை தேர்வு செய்யலாம்.தேவைப்பட்டால், உத்தேச விலைப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். துறைகள் தங்களுக்கு தேவையான, மின்னணு பொருட்களின் விலையை அறிந்து கொள்வதால், அதற்கு தேவையான நிதியை, எல்காட் நிறுவனத்திற்கு ‘ஆன்லைனில்’ வழங்கலாம். அனைத்து பரிவர்த்தனைகளும், இணையம்வழியாகவே மேற்கொள்ளப்படும்.அரசு துறைகள், தங்களுக்கு தேவையான கம்ப்யூட்டர், பிரின்டர், லேப்டாப், பென் டிரைவ் போன்ற மின்னணு சாதனைகளை, உடனடியாக கொள்முதல் செய்வதற்கு வசதியாக, விரைவில் எல்காட் இ – மார்க்கெட், இணைய வழி கொள்முதல் முறை, அரசால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது, தற்போது பரிசோதனையில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|