இணைய வழி கொள்முதல் முறை விரைவில் தமிழகத்தில் அறிமுகம்இணைய வழி கொள்முதல் முறை விரைவில் தமிழகத்தில் அறிமுகம் ... பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி ...
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2018
23:40

மும்பை: ‘‘நிர்­வாக நடை­மு­றை­களை மேம்­ப­டுத்த தவ­றும், நகர்ப்­புற கூட்­டு­றவு வங்­கி­கள், காணா­மல் போகும்,’’ என, ரிசர்வ் வங்கி துணை கவர்­னர், என்.எஸ்.விஸ்­வ­நா­தன் எச்­ச­ரித்­துள்­ளார்.அவர், குஜ­ராத் நகர்ப்­புற கூட்­டு­றவு வங்­கி­கள் கூட்­ட­மைப்பு நிகழ்ச்­சி­யில் பேசி­ய­தா­வது:நகர்ப்­புற கூட்­டு­றவு வங்­கி­கள், மக்­க­ளின் டிபா­சிட் பணத்­தில் இயங்­கு­கின்­றன. அத­னால், இவ்­வங்­கி­கள் மக்­க­ளி­டம் அதிக நம்­பிக்­கையை பெறு­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்.
சந்தைப் பங்கு : கடந்த, 2002ல், குஜ­ராத், மாதவ்­புரா மெர்­கன்­டைல் கூட்­டு­றவு வங்கி முறை­கே­டு­கள் அம்­ப­ல­மான பின், இவ்­வங்­கி­க­ளின், சந்­தைப் பங்கு தொடர்ந்து குறைந்து வரு­கிறது.கடந்த, 2001– -02ல், நகர்ப்­புற கூட்­டு­றவு வங்­கி­ க­ளின் சந்தை பங்கு, 6.4 சத­வீ­த­மாக இருந்­தது. இது, 2016- – 17ல், 3.3 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இதற்கு, வங்­கித் துறை­யில் அதி­க­ரித்­துள்ள போட்டி, புதிய நிதிச் சேவை­கள் அறி­மு­கம் போன்ற கார­ணங்­களை கூற­லாம்.எனி­னும், நகர்ப்­புற கூட்­டு­றவு வங்­கி­கள், டிபா­சிட்­தா­ரர்­க­ளின் நம்­பிக்­கையை தக்க வைத்து, தொடர்ந்து வங்­கிச் சேவை­யில் நீடிக்க, நிர்­வாக நடை­மு­றை­களை மேம்­ப­டுத்­து­வது அவ­சி­யம். இல்­லை­யென்­றால் காணா­மல் போக நேரி­டும்.சந்தை பங்கை வைத்து, ஒரு வங்கி மீது மக்­கள் கொண்­டுள்ள நம்­பிக்­கையை மதிப்­பி­ட­லாம். நகர்­புற கூட்­டு­றவு வங்­கி­க­ளின், சந்­தைப் பங்கு, பாதி­யாக குறைந்­துள்­ள­தால், அவை, மக்­க­ளி­டம் அதிக நம்­பிக்­கையை பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை, ரிசர்வ் வங்கி எடுத்து வரு­கிறது.
நிதி வல்லுனர்கள் : மாநில அர­சு­க­ளு­டன், முத்­த­ரப்பு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. பெரும்­பா­லான மாநி­லங்­களில், வங்­கிச் செயல்­பா­டு­களை ஆய்வு செய்ய, கண்­கா­ணிப்பு குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. வங்­கி­க­ளின் இயக்­கு­னர் குழு­வில், முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில், நிதி வல்­லு­னர்­களை நிய­மிக்க வேண்­டும் என, ரிசர்வ் வங்கி வலி­யு­றுத்­தி­ உள்­ளது.அதே­ச­ம­யம், இரட்டை தலைமை கார­ண­மாக, நகர்­புற கூட்­டு­றவு வங்­கி­களில் எழும் பிரச்­னை­க­ளுக்கு, ஓர­ள­விற்கே ரிசர்வ் வங்­கி­யால் தீர்வு காண முடி­கிறது.எந்த நோக்­கத்­திற்­காக கூட்­டு­றவு வங்­கி­கள் துவக்­கப்­பட்­ட­னவோ, அந்த கொள்­கை­க­ளின் படி நடக்க வேண்­டும்.வங்கி நிர்­வா­கச் செயல்­பா­டு­களை வரை­யறை செய்து, பொறுப்­பு­கள் சரி­வர பிரித்­து அளிக்­கப்­பட வேண்­டும். இது­போன்ற பல்­வேறு அம்­சங்­க­ளு­டன், வங்­கி­யின் இயக்­கு­னர் குழு நிர்­வா­கம் தொடர்­பான வரைவு விதி­மு­றை­களை, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டு உள்­ளது.மேலும், கூட்­டு­றவு வங்­கி­களை, ‘ஸ்மால் பைனான்ஸ் பேங்க்’ ஆக மாற்­று­வ­தற்­கும் அனு­மதி அளிக்­கப்­படும் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.இது, கூட்­டு­றவு வங்­கி­கள் மீதான நம்­ப­கத்­தன்­மையை அதி­க­ரிக்க உத­வும்.கூட்­டு­றவு வங்­கி­கள், ஸ்மால் பைனான்ஸ் பேங்க் ஆகி­ய­வற்­றின் வர்த்­த­கத்­தில் அதிக வேறு­பாடு கிடை­யாது. அத­னால், கூட்­டு­றவு வங்­கி­கள், ஸ்மால் பைனான்ஸ் பேங்க் உடன் இணை­ய­லாம். அல்­லது அவ்­வாறு மாறு­வ­தற்­கான உரி­மம் பெற­லாம்.இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.
டிபாசிட் : நகர்­புற கூட்­டு­றவு வங்­கி­களில், 10 கோடி ரூபாய்க்கு குறை­வான டிபா­சிட்­க­ளு­டன், 124 வங்­கி­கள் உள்­ளன. 232 வங்­கி­க­ளின் டிபா­சிட், 10.-25 கோடி ரூபா­யாக உள்­ளது. இன்­னும், ஒருங்­கி­ணைந்த வங்­கிச் சேவை வச­தி­களை அறி­மு­கப்­ப­டுத்­தா­மல், 171 வங்­கி­கள் உள்­ளன. நகர்­புற கூட்­டு­றவு வங்­கி­களில், 2005 – -2018 வரை, 127 இணைப்பு நட­வ­டிக்­கை­கள் தான் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)