பதிவு செய்த நாள்
27 ஆக2018
23:25
புதுடில்லி : வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான, ‘கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக கோரியிருந்த விண்ணப்பத்தை ஏற்று, அனுமதி வழங்கி உள்ளது, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபி.
கடந்த ஜூன் மாதத்தில், கிராப்ட்ஸ்மேன் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்காக விண்ணப்பித்து இருந்தது. 43,83,320 பங்குகளை சந்தையில் வெளியிட்டு, 400 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஐ.சி.ஐ.சி., செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., ஹோல்டிங்ஸ் மற்றும் எஸ்.பி.ஐ., கேபிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கான பணிகளை மேற்கொள்ள இருக்கின்றன. கிராப்ட்ஸ்மேன் ஆட்டோமேஷன் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி இருப்பதையடுத்து, இந்த ஆண்டில், இதுவரை மொத்தம், 42 நிறுவனங்களுக்கு, பங்கு வெளியீட்டுக்காக அனுமதி வழங்கி உள்ளது, செபி.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|