பதிவு செய்த நாள்
30 ஆக2018
03:23
பொதுத் துறையைச் சேர்ந்த, பி.இ.எம்.எல்., நிறுவனம், பொது கொள்முதல் ஆணை, 2017ன் படி, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது.
பி.இ.எம்.எல்., எனும், ‘பாரத் எர்த் மூவர்ஸ்’ நிறுவனம், சுரங்கம், கட்டுமானம், ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றுக்கான கருவிகளை உற்பத்தி செய்து தருகிறது. அத்துடன், ராணுவத் துறைக்கு தேவையான ராட்சத வாகனங்கள், மீட்பு வாகனங்கள், டாங்கி, போக்குவரத்து வாகனங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், துணை பொருட்கள் சப்ளை செய்ய, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு, பி.இ.எம்.எல்., நிறுவனம் முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.
இது குறித்து, ராணுவ பாதுகாப்பு உற்பத்தி துறை, ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட தகவல்: பி.இ.எம்.எல்., நிறுவனம், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அந்நிறுவனங்களின் சப்ளையில், குறைந்தபட்சம், 50 சதவீதம் உள்நாட்டு மூலப்பொருட்கள் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு, www.ddpmod.gov.in என்ற வலைதளத்தில் விபரங்களை அறியலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|