பதிவு செய்த நாள்
30 ஆக2018
03:29
புதுடில்லி : புதிய கார், இருசக்கர வாகனம் ஆகியவற்றுக்கு, கட்டாயம் நீண்ட கால மூன்றாம் நபர் வாகன காப்பீடு எடுக்கும் விதிமுறை, செப்., 1ல் அமலுக்கு வருகிறது.
தற்போது, ஓராண்டிற்கு மட்டுமே, மூன்றாம் நபர் வாகன காப்பீடு எடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும், காப்பீட்டை புதுப்பித்து வர வேண்டும். ஒருசில பொது காப்பீட்டு நிறுவனங்கள் மட்டும், பல ஆண்டுகளுக்கு காப்பீடு வழங்குகின்றன.
உத்தரவு :
இந்நிலையில், ‘அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும் கட்டாயம், நீண்ட கால மூன்றாம் நபர் வாகன காப்பீட்டு சேவை வழங்க வேண்டும்’ என, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஆணையம், அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பொது காப்பீட்டு நிறுவனங்களும், வாகன உரிமையாளர்களுக்கு, நீண்ட கால மூன்றாம் நபர் வாகன காப்பீடு வசதி வழங்க வேண்டும். இதன்படி, புதிய கார்களுக்கு, கண்டிப்பாக, மூன்று ஆண்டுகளுக்கு, மூன்றாம் நபர் வாகன காப்பீடு அளிக்க வேண்டும்.
அதுபோல, புதிய இருசக்கர வாகனங்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு, மூன்றாம் நபர் வாகன காப்பீடு வசதி வழங்கப்பட வேண்டும். இந்த திட்டங்களை, காப்பீட்டு நிறுவனங்கள் தனியாக வகைப்படுத்தி, செயல்படுத்தலாம். புதிய விதிமுறை, செப்., 1ல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இழப்பீடு :
வாகன உரிமையாளர்கள், விபத்து தொடர்பான சட்டப் பிரச்னைகளை சமாளிக்கவும், பாதிக்கப்பட்ட நபர் இழப்பீடு பெறவும், மூன்றாம் நபர் வாகன காப்பீடு திட்டம் உதவுகிறது. காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம், ஒவ்வொரு நிதியாண்டிற்கும், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டிற்கான பிரிமியத்தை நிர்ணயிக்கிறது. தற்போது, நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் அமலுக்கு வர உள்ளதால், செப்., 1 முதல், அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான புதிய பிரிமியம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை மறுநாள் முதல் விற்பனையாகும் கார், இருசக்கர வாகனங்களுக்கு, முறையே, மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கான பிரிமியம், மொத்தமாக வசூலிக்கப்படும். பொது காப்பீட்டு நிறுவனங்கள், முதல் ஆண்டு பிரிமியம் தொகையை, வருவாயாக எடுத்துக் கொள்ளும். அடுத்த இரு ஆண்டுகளுக்கான தொகை, முன்கூட்டியே செலுத்தப்பட்ட பிரிமியம் ஆக கருதப்படும்.
தற்போது, வாகன திருட்டு, வாகன பாதிப்பு ஆகியவற்றுக்கு, தனி காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. இவற்றுடன், மூன்றாம் நபர் வாகன காப்பீடும் சேர்த்து, ‘பேக்கேஜ்’ ஆக, ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டமும் கிடைக்கிறது.
மூன்றாம் நபர் வாகன காப்பீடு:
(செப்., 1 – மார்ச் 31, 2019 )கார் 3 ஆண்டு பிரிமியம் (ரூபாய்)1,000 சி.சி., வரை 5,2801,001 சி.சி., – 1,500 சி.சி., வரை 9,5341,500 சி.சி.,க்கு மேல் 24,305இருசக்கர வாகனம் – 5 ஆண்டு பிரிமியம் (ரூபாய்)75 சி.சி., வரை 1,04576 சி.சி., – 150 சி.சி., வரை 3,285151 சி.சி., – 350 சி.சி., வரை 5,453
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|