பதிவு செய்த நாள்
30 ஆக2018
23:24
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சாரை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ்’ நிறுவனத்தில், இயக்குனராக நியமிப்பதற்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சாதக மாக ஓட்டளித்துள்ளது.
‘வீடியோகான்’ நிறுவனத்திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கிய விவகாரம் தொடர்பாக, சந்தா கோச்சார், ஜூன், 19 முதல் விடுப்பில் உள்ளார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, பி.என். ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு, வீடியோகான் கடன் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின், நிர்வாக குழுவில் இயக்குனராக ஆவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார், சந்தா கோச்சார். ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின், 80 சதவீத பங்குகள், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வசம் உள்ளன.
தற்போது வங்கியின் ஓட்டு சந்தா கோச்சாருக்கு சாதகமாக அமைந்துவிட்டதால், அவர் இயக்குனராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இருப்பினும், அவரது தேர்வுக்கு வெளியில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் நிறுவனத்தின் இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டால், அவரை நீண்ட கால விடுப்புக்கு அனுப்பியது வெறும் கண்துடைப்பு நாடகமாகிடும் என்கின்றனர், எதிரணியினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|