வரி வருவாய் உயர்வால் நிதி பற்றாக்குறை சமாளிப்புவரி வருவாய் உயர்வால் நிதி பற்றாக்குறை சமாளிப்பு ... கேரளா மழை காரணமாக வாகன விற்பனை பாதிப்பு கேரளா மழை காரணமாக வாகன விற்பனை பாதிப்பு ...
கணக்கு தணிக்கை விதிமுறை மறுபரிசீலனை? ‘ஆடிட்டர்’கள் விலகலை தடுக்க முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2018
05:15

புதுடில்லி : சமீப கால­மாக, நிறு­வ­னங்­களில் இருந்து ஏரா­ள­மான, ‘ஆடிட்­டர்’கள் விலகி வரு­கின்­ற­னர். இந்­தாண்டு, ஜன., – ஜூலை, 17 வரை, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­களில் இருந்து, 204 ஆடிட்­டர்­கள் விலகி உள்­ள­னர். இத­னால், இந்­நி­று­வ­னங்­க­ளின் பங்கு விலை, 20- – 60 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.

ஆடிட்­டர்­க­ளின் வில­க­லுக்கு, நிறு­வ­னங்­கள், போதிய விப­ரங்­களை தந்து ஒத்­து­ழைக்­கா­தது தான் கார­ணம் என, கூறப்­ப­டு­கிறது. இதை­ய­டுத்து, சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­களில், நிதி முறை­கே­டு­கள் நடை­பெற்­றுள்­ளதா; ஆடிட்­டர்­கள் வில­க­லுக்கு உண்­மை­யான கார­ணம் என்ன என்­பதை விசா­ரித்து, அறிக்கை அளிக்­கு­மாறு, நிறு­வன பதிவு இயக்­கு­னர்­கள் கேட்­டுக் கொள்­ளப்­பட்­டுள்­ள­னர். மேலும், ஆடிட்­டர்­கள் வில­க­லுக்­கான கார­ணத்தை தெரி­விக்­கு­மாறு, சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு, மத்­திய நிறு­வன விவ­கா­ரங்­கள் துறை, கடி­தம் அனுப்­பி­ உள்­ளது.

மேலும், ஆடிட் நிறு­வ­னங்­கள், ஆடிட் குழு தலை­வர்­கள், தனி ஆடிட்­டர்­கள் ஆகி­யோ­ரை­யும் கார­ணம் குறித்து விசா­ரிக்­க­வும் முடிவு செய்­துள்­ளது. அத்­து­டன், கணக்கு தணிக்கை விதி­மு­றை­களை உரு­வாக்­கும், ஐ.சி.ஏ.ஐ., எனப்­படும் இந்­திய பட்­டய கணக்­கா­ளர் மையத்­து­டன் ஆலோ­சிக்­க­வும், திட்­ட­மிட்­டுள்­ளது.

இது குறித்து, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: நிறு­வ­னங்­கள் சட்­டம், 143ம் பிரிவு, ஆடிட்­டர்­கள் பின்­பற்ற வேண்­டிய, கணக்கு தணிக்கை விதி­மு­றை­களை கூறு­கிறது. அவற்றை கடை­பி­டிக்க வேண்­டிய பொறுப்பு, ஆடிட்­டர்­க­ளுக்கு உள்­ளது. ஐ.சி.ஏ.ஐ.,யின், கணக்கு தணிக்கை விதி­முறை, ஒத்­து­ழைக்­காத நிறு­வ­னங்­களில் இருந்து, ஆடிட்­டர்­கள் விலக அனு­ம­திக்­கிறது.

அத­னால், கணக்கு தணிக்கை விதி­மு­றை­கள் குறித்து மறு­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு, ஐ.சி.ஏ.ஐ.,யிடம் மத்­திய அரசு கேட்­டுக் கொள்­ளும் என, தெரி­கிறது. இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)