பதிவு செய்த நாள்
03 செப்2018
00:15
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான நீட்டிக்கப்பட்ட அவகாசமும் முடிந்துள்ள நிலையில், இன்னமும் வரித்தாக்கல் செய்யாதவர்கள் தாமதமாக வரித்தாக்கல் செய்யலாம் என்றாலும், அதனால் சில பலன்களை இழக்க வேண்டி வரும்.
வருமான வரி வரம்பிற்குள் வருபவர்கள் குறித்த காலத்திற்குள் வரித்தாக்கல் செய்ய வேண்டும். எனினும், கெடுவை தவறவிட்டவர்கள் தாமதமாகவும் தாக்கல் செய்யலாம். கடந்த மதிப்பீட்டு ஆண்டு வரை, தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் கிடையாது. எனினும், 2018 -– 19 மதிப்பீட்டு ஆண்டு முதல் அபராதம் பொருந்தும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தாக்கல் செய்தால், 5,000 ரூபாய் வரை அபராதம் மற்றும் அதற்கு மேல் தாக்கல் செய்தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
எனினும், வருமனம் ஐந்து லட்சத்திற்குள் இருந்தால் அபராத தொகை ஆயிரம் ரூபாய்க்குள் தான் இருக்கும். மேலும் செலுத்தப்பட்ட வரி பாக்கி இருக்குமானால், அதற்கும் அபராத வட்டி விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. வரி பாக்கி இல்லை எனில், இந்த அபராத வட்டி கிடையாது.தாமதமாக வரித்தாக்கல் செய்ய என்று தனியே வழிமுறை இல்லை. வழக்கமான வரித்தாக்கல் செய்வது போலவே தாக்கல் செய்ய வேண்டும். எனினும், 139 (4) எனும் பிரிவின் கீழ் தாக்கம் எனும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்டும். முந்தைய ஆண்டுக்கான கணக்கு எனில் இது பொருந்தது.
தாமதமாக வரித்தாக்கல் செய்தாலும், தவறுகள் இருந்தால் அதை திருத்தம் செய்து மீண்டும் தாக்கல் செய்யலாம். ஆனால், வழக்கமான தாக்கலின் போது கிடைக்கும் சில பலன்களை இழக்க வேண்டியிருக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|