பதிவு செய்த நாள்
07 செப்2018
00:09
மும்பை:நேற்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 72ஐ தாண்டி வீழ்ச்சி கண்டது.
நேற்று, அன்னியசெலாவணி சந்தையில், வர்த்தகம் துவங்கியதும், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 8 காசுகள் அதிகரித்து, 71.67 ஆக உயர்ந்தது.ஆனால், டாலருக்கான தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பின் ஏற்றம் நிலைக்கவில்லை. வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 72ஐ தாண்டி, 72.12 வரை சரிவடைந்தது.
வர்த்தகத்தின் இறுதியில், சற்று முன்னேற்றம் கண்டு, 71.98ல் நிலை கொண்டது. தொடர்ந்து ஏழு வர்த்தக தினங்களாக, ரூபாய் மதிப்பு, புதிய சரிவை சந்தித்து வருகிறது.இது குறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:சர்வதேச நிலவரங்கள் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. அதேசமயம், டாலர் தவிர்த்து, இதர அன்னிய செலாவணிகளுக்கு நிகரான ரூபாய் மதிப்பு நன்றாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இறக்குமதி நிறுவனங்கள் அதிக அளவில் டாலரை வாங்கி வருகின்றன. அன்னிய முதலீடுகள் வெளியேறுவதும் அதிகரித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான, இதர அன்னிய செலாவணிகள் மதிப்பும் குறைந்து உள்ளது.இது போன்ற காரணங்களால், ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|