பதிவு செய்த நாள்
19 செப்2018
23:33
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக, இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க டாலருக்கு நிகரான, இந்திய ரூபாயின் மதிப்பு அண்மையில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதனால், இந்திய இறக்குமதியாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஏற்றுமதியாளர்கள் தற்காலிக பயன் பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்டமைப்பின் முன்னாள் தலைவர், லீ ரபீக் அகமது கூறியதாவது:
பயன் இல்லை :
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 68 லிருந்து, 72 ரூபாயாக சரிந்துள்ளது. இதனால், ஏற்றுமதியாளர்கள் தற்காலிக பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், மிகப்பெரிய அளவில் பயன் இல்லை. ஏனெனில், ஏற்றுமதி செய்யும் பொருட்கள் விலை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மட்டுமே, பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும். நிர்ணயிக்காமல், புதிய ஆணை பெறப்படும் பொருட்கள் மட்டுமே புதிய விலைக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
மேலும், ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால், வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் எங்களிடம் விலையை குறைக்க வற்புறுத்துவர். இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு இதில் பெரிய பலன் இல்லை. இந்திய இறக்குமதியாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரசு முயற்சி :
ஏனெனில், ரூபாயின் மதிப்பு சரிவதால், அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும். அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்யப்படுவதால், அந்தப் பொருட்கள் சந்தைக்கு வரும் போது, அதன் விலை அதிகரிக்கும். இந்நிலையில், ரூபாயின் மதிப்பை உயர்த்த, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|