பதிவு செய்த நாள்
30 செப்2018
00:55
‘ஜிம் – 2’ எனும் இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டின் செயல்பாடுகள், தமிழகத் தில் எப்போது துவங்கும் என, தொழில் துறை அதிகாரிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.சென்னையில், 2019, ஜனவரி, 23, 24ம் தேதிகளில், இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள்மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பல்வேறு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.மாநாட்டில் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க, தைவான், தாய்லாந்து, சீனா, சிங்கப்பூர் என, பல்வேறு நாடுகளுக்கு, தொழில் துறை அமைச்சர், சம்பத் தலைமையில், அதிகாரிகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், ஜிம் – 2 பணிகள் தமிழகத்தில் எப்போது துவங்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஜிம் – 2 முதலீடுகளை ஈர்க்க, பல்வேறு நாடுகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று வருகின்றனர்; இன்னும் பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ளனர்.ஆனால், தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை, கருத்தரங்கம் போன்ற செயல்கள் எப்போது நடைபெறும் என தெரியவில்லை.இதை தொடர்ந்தே, மாவட்ட அளவில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், பணிகளை துவங்கும்.மாநாடு நடைபெற சில மாதங்களே இருக்கின்றன. எனவே, தமிழகத்தில் மாநாட்டுப் பணிகளை அரசு வெளிப்படையாக அறிவித்த பின், அனைத்து செயல்களும் துரிதமாக நடைபெறும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|