பதிவு செய்த நாள்
30 செப்2018
00:56
புதுடில்லி: மத்திய அரசு, 28 பால் பொருட்களின் ஏற்றுமதிக்கு அளித்து வரும் சலுகையை, மேலும் உயர்த்தியுள்ளது. இது குறித்து, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பால் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், அவற்றுக்கான சலுகை வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, பால், பாலாடை கட்டி, பாலாடை பவுடர், தயிர், மோர், பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் உணவு உட்பட, 28 பால் பொருட்களுக்கான ஏற்றுமதி சலுகை, 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், பால் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு அடிப்படையில், வரிச் சலுகை வழங்கப்படும். ஏற்றுமதியாளர்கள், சலுகை தொகையை, சுங்க வரி உட்பட, பல்வேறு வரிகளை செலுத்துவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில், பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், பால் பொருட்கள் ஏற்றுமதி சலுகை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|