பதிவு செய்த நாள்
01 அக்2018
03:58
நீண்ட இடைவெளிக்குப்பிறகு, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப் பட்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஒரு அலசல்.பண்டிகை காலம் துவங்குவதற்கு முன், முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தியாக, சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப்பின் இது நிகழ்ந்துள்ளது. அதிக, ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு, நிச்சயம் இது, மகிழ்ச்சி தரும் நடவடிக்கையாகும். இதன் காரணமாக சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. இந்த பின்னணியில், சராசரி முதலீட்டாளர்களின் முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு என்பது, எந்த அளவுக்கு பயன் தரக்கூடியது, எனும் கேள்வியும் எழுகிறது.சிறுசேமிப்பின் அருமைசிறுசேமிப்பு திட்டங்கள் பொதுவாக மூன்று வகைப்படுகிறது. அஞ்சலக சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி உள்ளிட்ட அஞ்சலக திட்டங்கள் முதல் வகையாக அமைகின்றன. தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் போன்றவை சேமிப்பு சான்றிதழ் திட்டமாக அமைகின்றன. மூன்றாவதாக சமூக பாதுகாப்பு திட்டம் வருகிறது. பி.பி.எப்., மற்றும் மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம் இந்த பிரிவின் கீழ் வருகிறது.சிறுசேமிப்பு திட்டங்கள் முதலீட்டு நோக்கில் முக்கியமானவை என்பதில் சந்தேகம் இல்லை. இவை சேமிப்பை ஊக்குவிப்பதோடு, சமூக பாதுகாப்பையும் அளிக்கின்றன. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது. அரசு பத்திரங்கள் தரும் பலனுக்கு ஏற்ப, இவற்றின் வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. தற்போது, அக்டோபர் – டிசம்பர் காலாண்டிற்கு வட்டி விகிதம், 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. வட்டி விகிதம் உயர்ந்துள்ள சூழலில் சிறுசேமிப்பு திட்டங்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் இனி, 7.9 சதவீதம் வரை பலன் அளிக்கும். வட்டி விகித போக்கு, கச்சா எண்ணெய் விலை, ஆகிய அம்சங்களின் அடிப்படையில் குறுகிய காலம் முதல் மத்திய காலம் வரை, சிறுசேமிப்பு திட்ட வட்டி விகிதம் உயர வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை, அவர்களின் நிதி இலக்கு, வரி வரம்பு மற்றும் முதலீட்டு காலத்திற்கு ஏற்ப, இந்த திட்டங்களின் முதலீட்டை அதிகரிப்பதை பரிசீலிக்கலாம் என்கின்றனர்.முதலீடு உயர்வுஅதிக ரிஸ்கை விரும்பாத முதலீட்டாளர்கள், அஞ்சலக சேமிப்பு மற்றும் பி.பி.எப்., முதலீட்டை நாடலாம் என, கருதப்படுகிறது. நீண்ட கால நோக்கில் பெண் குழந்தைகளுக்கான, செல்வ மகள் திட்டமும், நல்ல பலன் தரும் வாய்ப்புள்ளது. ஆனால், அதிக வரி வரம்பு பிரிவில் இருப்பவர்களை பொறுத்தவரை இவை தரும் பலன் குறைவாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. மிதமான ரிஸ்க் எடுக்ககூடிய முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் ஏற்புடையதாக இருக்கும் என, கருதப்படுகிறது.எனினும், முதலீட்டாளர்கள் இந்த வட்டி விகித உயர்வை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த திட்டங்களில் தீவிரமாக முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர்.அதைவிட, பி.பி.எப்., அஞ்சலக சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு தேவையான தொகையை முதலீடு செய்து, சந்தை சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்வது சரியான உத்தியாக இருக்கும் என, வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|