பதிவு செய்த நாள்
02 அக்2018
00:44
அவினாசி, அக். 2–ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு, சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நிலக்கடலை கொள்முதல் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், திங்கள் தோறும் நடக்கும் நிலக்கடலை ஏலத்தில், உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பர்.மதுரை, கோவில்பட்டி, விருதுநகர், உடுமலை, தாராபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள், நிலக்கடலை கொள்முதல் செய்வர். சமையல் எண்ணெய், சாக்லேட், வறுகடலை தயாரிப்புக்கு, இங்கு கொள்முதல் செய்யப்படும் நிலக்கடலை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
அவினாசி சுற்றுப்புற பகுதியில் கடந்தாண்டு போதிய மழை பெய்யாததால், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. வரும் நாட்களில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை வருவதால், நிலக்கடலைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.நேற்று நடந்த ஏலத்தில், 3,600 மூட்டை (1 மூட்டை, 40 கிலோ) நிலக்கடலை ஏலத்துக்கு வந்தது.
முதல் தரமான நிலக்கடலை, கிலோ, 50 – 51 ரூபாய் வரை விற்கப்பட்டது.ஏலம் குறித்து, விற்பனைக்கூட கண்காணிப்பாளர், யுவராஜ் கூறுகையில், ‘‘கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு, கிலோ நிலக்கடலைக்கு, 10 ரூபாய் கூடுதலாக விலை கிடைக்கிறது.‘‘விவசாயிகள், இருப்பில் வைத்துள்ள நிலக்கடலையை ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும். பண்டிகை காலம் வருவதால், வியாபாரிகள் அதிகளவில் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்,’’ என்றார்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|