குடும்ப வர்த்தகத்தில்  இளம் தலைமுறை ஆர்வம்குடும்ப வர்த்தகத்தில் இளம் தலைமுறை ஆர்வம் ... ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனம் ஆர்வம் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு சிங்கப்பூர் நிறுவனம் ஆர்வம் ...
நிலக்கடலை கொள்முதல் :ஆயுதபூஜையால் கிராக்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2018
00:44

அவினாசி, அக். 2–ஆயுத பூஜை, தீபாவளியை முன்னிட்டு, சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நிலக்கடலை கொள்முதல் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது.திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே சேவூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், திங்கள் தோறும் நடக்கும் நிலக்கடலை ஏலத்தில், உள்ளூர் விவசாயிகள் மட்டுமன்றி, பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்பர்.மதுரை, கோவில்பட்டி, விருதுநகர், உடுமலை, தாராபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள், நிலக்கடலை கொள்முதல் செய்வர். சமையல் எண்ணெய், சாக்லேட், வறுகடலை தயாரிப்புக்கு, இங்கு கொள்முதல் செய்யப்படும் நிலக்கடலை அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
அவினாசி சுற்றுப்புற பகுதியில் கடந்தாண்டு போதிய மழை பெய்யாததால், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. வரும் நாட்களில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை வருவதால், நிலக்கடலைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.நேற்று நடந்த ஏலத்தில், 3,600 மூட்டை (1 மூட்டை, 40 கிலோ) நிலக்கடலை ஏலத்துக்கு வந்தது.
முதல் தரமான நிலக்கடலை, கிலோ, 50 – 51 ரூபாய் வரை விற்கப்பட்டது.ஏலம் குறித்து, விற்பனைக்கூட கண்காணிப்பாளர், யுவராஜ் கூறுகையில், ‘‘கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு, கிலோ நிலக்கடலைக்கு, 10 ரூபாய் கூடுதலாக விலை கிடைக்கிறது.‘‘விவசாயிகள், இருப்பில் வைத்துள்ள நிலக்கடலையை ஏலத்துக்கு கொண்டு வர வேண்டும். பண்டிகை காலம் வருவதால், வியாபாரிகள் அதிகளவில் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்,’’ என்றார்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)