பதிவு செய்த நாள்
02 அக்2018
01:08
புதுடில்லி:கடந்த, செப்டம்பர் மாதம், ஜி.எஸ்.டி., வாயிலான வருவாய், 94,442 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, ஆகஸ்டில், 93,690 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், ஜி.எஸ்.டி.ஆர் – 3பி படிவத்தில் விற்பனை கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை, 67 லட்சமாக அதிகரித்துள்ளது
ஜி.எஸ்.டி., வருவாயில், மத்திய அரசின், சி.ஜி.எஸ்.டி., மூலம், 15,318 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின், எஸ்.ஜி.எஸ்.டி., வாயிலாக, 21,061 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.மாநிலங்கள் இடையிலான விற்பனைக்கு, மத்திய அரசு வசூலிக்கும், ஐ.ஜி.எஸ்.டி., மூலம், 50,070 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.
இதில், இறக்குமதி மூலம் கிடைத்த, 25,308 கோடி ரூபாய் மற்றும் கூடுதல் வரி வாயிலாக வசூலித்த, 7,993 கோடி ரூபாய் அடங்கும்.செப்டம்பரில், வரி வருவாய் பகிர்வுக்கு பின், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு முறையே, 30,574 கோடி ரூபாய் மற்றும் 35,015 கோடி ரூபாய் கிடைத்துஉள்ளது. ஜி.எஸ்.டி., வசூல், எதிர்பார்த்த அளவிற்கு உள்ளதாக, மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு, ஜி.எஸ்.டி., மூலம், ஜனவரி, 86,318 கோடி; பிப்ரவரி, 85,000 கோடி; மார்ச், 89,264 கோடி; ஏப்ரல், 1,03,458 கோடி; மே, 94,016 கோடி; ஜூன், 95,610 கோடி மற்றும் ஜூலையில், 96,483 கோடி ரூபாய்; ஆகஸ்டில், 93,690 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|