இந்தாண்டில் மூன்றாம் முறையாக ‘ரெப்போ’ வட்டி உயர வாய்ப்புஇந்தாண்டில் மூன்றாம் முறையாக ‘ரெப்போ’ வட்டி உயர வாய்ப்பு ...  காப்பீட்டு தரகு சேவையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு காப்பீட்டு தரகு சேவையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டு ...
உயிரி எரிவாயு உற்பத்தி திட்டம் துவக்கம்:5,000 மையங்கள்; ரூ.1.75 கோடி முதலீடு; 75,000 வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2018
01:10

புதுடில்லி:''அடுத்த ஐந்து ஆண்டுகளில், வேளாண் கழிவு, மாட்டுச் சாணம் உள்ளிட்டவை மூலம், உயிரி எரிவாயுவை உற்பத்தி செய்ய, 5,000 தொழில் மையங்கள் அமைக்கப்படும்,'' என, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார்.அவர், டில்லியில், வேளாண் கழிவுகள் வாயிலான உயிரி எரிவாயு உற்பத்தி திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:


விண்ணப்பிக்கலாம்

தனியார் நிறுவனங்கள் மூலம், வேளாண் கழிவுகள், மாட்டுச் சாணம், நகராட்சிகள் சேகரிக்கும் திடக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம், உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1.75 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில், 5,000 உயிரி எரிவாயு உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். இதில், நேரடியாக, 75 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

இந்த மையங்களில் இருந்து உற்பத்தியாகும் உயிரி எரிவாயுவை, பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள், கிலோ, 46 ரூபாய் வீதம் கொள்முதல் செய்ய உள்ளன.இந்த எரிவாயுவை, எண்ணெய் நிறுவனங்கள், அவற்றின் சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும்.இதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்குமதி தேவையை குறைக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தில் இணைந்து, சி.பி.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு உற்பத்தி மையங்கள் அமைக்க விரும்புவோர், அடுத்த ஆண்டு, மார்ச், 31 வரை விண்ணப்பிக்கலாம்.டிசம்பருக்குள், முதல், சி.பி.ஜி., உற்பத்தி மையம் துவக்கப்படும். தற்போது, பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தப்படும், சி.என்.ஜி., என்ற அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கு மாற்றாக, சி.பி.ஜி., விளங்கும்.


தற்போதுள்ள இயற்கை எரிவாயுவை விட, அதிக விலைக்கு உயிரி எரிவாயு கொள்முதல் செய்யப்படும். அத்துடன், நிறுவனங்கள் உற்பத்தி செய்யும், மொத்த உயிரி எரிவாயுவையும், எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும் என, உறுதி அளிக்கப்படுகிறது.தற்போது, நாட்டில் தினமும், 14.60 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படுகிறது. இதில், இறக்குமதியின் பங்கு, 56 சதவீதமாகஉள்ளது.


உயிரி எரிவாயு உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், இயற்கை எரிவாயு இறக்குமதி குறையும்.தற்போது, வேளாண் மற்றும் இதர கழிவுகள் மூலம், 6.20 கோடி டன், சி.பி.ஜி., உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. இது, எரிபொருள் நுகர்வில், எரிவாயுவின் பங்கை, தற்போதைய, 6--7 சதவீதத்தை தாண்டி வளர்ச்சி காண உதவும்.
சமையல் எரிவாயு
மேலும், 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 8-6 நகரங்களில், நகர எரிவாயு வினியோகத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம், தொலைதொடர்பு துறையை விட அதிகமாக, 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை, எரிவாயு துறை ஈர்க்கும்.அடுத்த ஐந்து ஆண்டுகளில், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு விற்பனை மையங்கள் எண்ணிக்கை, தற்போதைய, 1,500லிருந்து, 10 ஆயிரமாக உயரும்.குழாய் மூலம் சமையல் எரிவாயு பெறும் வீடுகளின் எண்ணிக்கை, இரு மடங்கு உயர்ந்து, 2.50 லட்சமாக அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தேவை உயருகிறது

இந்தியாவின் வேகமான பொருளாதார வளர்ச்சியால், இதர நாடுகளை விட, எரிபொருள் தேவை கிடுகிடு வென அதிகரித்து வருகிறது. கடந்த, 2017 நிலவரப்படி, சர்வதேச எரிவாயு தேவையில், இந்தியாவின் தேவை, 5.58 சதவீதமாக உள்ளது. இது, 2040ல், 11 சதவீதமாக உயரும்.இதே காலத்தில், கச்சா எண்ணெய் தேவை, 22.17 கோடி டன்னில் இருந்து, 50 கோடி டன்னாக அதிகரிக்கும். இயற்கை எரிவாயு பயன்பாடு, 5.42 கோடி டன்னில் இருந்து, 14.30 கோடி டன்னாக பெருகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)