200 எம்.எஸ்.எம்.இ.,200 எம்.எஸ்.எம்.இ., ... காப்பீட்டை அதிகம் நாடும் இந்தியர்கள் காப்பீட்டை அதிகம் நாடும் இந்தியர்கள் ...
மூலதன ஆதாய வரி சலுகை: புதிய விதிமுறைகள் வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2018
03:10

புதுடில்லி:மத்திய நேரடி வரிகள் வாரியம், நீண்ட கால மூலதன ஆதாய வரி சலுகை தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.


இதன் மூலம், புதிய பங்கு வெளியீடுகள் மற்றும் தொடர் பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வோர் அதிகம் பயன் பெறுவர்.பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள், வர்த்தக அறக்கட்டளை யூனிட்டுகள் ஆகியவற்றின் விற்பனைக்கு, நிதிச் சட்டம், 2018ன் படி, சலுகை அடிப்படையிலான, நீண்ட கால மூலதன ஆதாய வரி, 10 சதவீதமாக உள்ளது.


பங்கு விற்பனை


இச்சலுகையை பெற, பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள், வர்த்தக அறக்கட்டளை யூனிட்டுகள் ஆகியவற்றின் விற்பனையில், 0.10 சதவீத பங்கு பரிவர்த்தனை வரி செலுத்தி இருக்க வேண்டும்.எனினும், ஒரு சிலவற்றின் விற்பனைக்கு, மத்திய அரசு, பங்கு பரிவர்த்தனை வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளது.


இந்நிலையில், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை தொடர்பான புதிய விதிமுறைகளை, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.அதன்படி, பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு யூனிட்டுகள், வர்த்தக அறக்கட்டளை யூனிட்டுகள் ஆகியவற்றின் விற்பனையில், பங்கு பரிவர்த்தனை வரி செலுத்தாத போதிலும், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீதிமன்றம்



இதனால், புதிய பங்கு வெளியீடுகள், தொடர் பங்கு வெளியீடுகள், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தின் போனஸ் அல்லது உரிமைப் பங்குகளின் விற்பனையில், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை பெற முடியும்.மேலும், நீதிமன்றம், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளின் அனுமதியுடன் கையகப்படுத்தும் நிறுவனத்தின் பங்குகளுக்கும், இச்சலுகை பொருந்தும். அத்துடன், ஒரு நிறுவனம், பணியாளர்களுக்கு ஒதுக்கும் பங்கு விற்பனையிலும், இச்சலுகையை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


சலுகை கிடையாது


முன்னுரிமை அடிப்படையில் பங்கு ஒதுக்கீடு செய்து, பிராந்திய பங்குச் சந்தைகளில் இடம் பெற்றுள்ள, அதிக அளவில் வர்த்தகம் நடைபெறாத பங்குகளுக்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை கிடையாது. அதுபோல, ஒரு நிறுவனம், பிராந்திய பங்குச் சந்தையில் இருந்து நீக்கப்பட்டு, பின் மீண்டும் இடம் பெறும் காலத்திற்குள், கைமாறும் பங்குகளுக்கும், நீண்ட கால மூலதன ஆதாய வரிச் சலுகை பொருந்தாது என, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)