பதிவு செய்த நாள்
09 அக்2018
23:27
மும்பை:நேற்று, அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இறுதியில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 74.39 ஆக, புதிய வீழ்ச்சியை சந்தித்தது.
நேற்று, 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 84 டாலரை தாண்டி, 84.48 ஆக உயர்ந்தது. இதனால், டாலருக்கான தேவை அதிகரித்து, அதற்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைய வழி வகுத்தது.மேலும், அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில், பங்கு முதலீடுகளை திரும்பப் பெற்றதாலும், ரூபாய் மதிப்பு சரிந்தது.கடந்த, 5ம் தேதி அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் இடையே, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, முதன் முறையாக, 74.23ஐ எட்டியது.
அதன் பின், ரூபாய் மதிப்பில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.திங்களன்று, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, 74.06 ஆக இருந்தது. அன்று, அன்னிய நிதி நிறுவனங்கள், 1,805 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.இந்நிலையில், நேற்று ரூபாய் வெளி மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், 74.39 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|