இந்தியாவில் தகவல் சேமிப்பு ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், ‘ரெடி’ இந்தியாவில் தகவல் சேமிப்பு ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம், ‘ரெடி’ ...  மருத்துவ பரிசோதனை நிலையங்களில் மருத்துவ காப்பீடு விற்பனை மருத்துவ பரிசோதனை நிலையங்களில் மருத்துவ காப்பீடு விற்பனை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புதிய சான்ட்ரோ கார்மாத இறுதியில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2018
23:30

புதிய சான்ட்ரோ கார்மாத இறுதியில் வருகிறதுசென்னை, அக். 10–இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த, சான்ட்ரோ காரை, மீண்டும் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக, ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.


ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளில் ஒன்றான, சான்ட்ரோ, இந்தியாவில் மிகவும் வரவேற்பை பெற்ற கார். இந்த கார் தயாரிப்பு, 2014ம் ஆண்டு டிசம்பருடன் நிறுத்தப்பட்டது. அதன்பின், மீண்டும் இந்த மாத இறுதியில் சந்தைக்கு வர உள்ளது.முற்றிலும் புதிய சான்ட்ரோ கார், நான்கு சிலிண்டருடன் கூடிய, 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டதாகும். மேலும், கியர் இல்லாமல் எளிதாக ஓட்டும் வகையில், ஏ.எம்.டி., எனும், ‘ஆட்டோ மேனுவல் டிரான்ஸ்மிஷன்’ வசதி கொண்ட காரும் கிடைக்கும்.


இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ஒய்.கே.கூ., கூறியதாவது:எங்களது புதிய காருக்கு, சான்ட்ரோ என பெயரிட, ஆன்லைனில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஓட்டளித்துள்ளனர். முதன் முதலாக, சான்ட்ரோ கார், சென்னை தொழிற்சாலையில், 1998ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு அறிமுகம் ஆனது. குடும்பத்துக்கு ஏற்ற கார் என, லட்சக்கணக்கான இந்தியர்களால் பாராட்டப்பட்டது.


அறிமுகம் ஆகவுள்ள புதிய சான்ட்ரோ கார் மீதான மதிப்புகளை தக்கவைத்துக் கொள்வதோடு, நவீன வசதிகள் கொண்ட, ‘மாடர்ன் டால் பாய் கார்’ ஆகவும் இருக்கும்.புதிய சான்ட்ரோ காருக்கான முன்பதிவு, இன்று முதல், 22ம் தேதி வரை இருக்கும். முதல், 50 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, 11 ஆயிரத்து, 100 ரூபாய் முன்பதிவு கட்டணம் செலுத்தினால் போதுமானது.


புதிய சான்ட்ரோ கார், உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. மாதம் ஒன்றுக்கு, 8,000 முதல், 10 ஆயிரம் புதிய சான்ட்ரோ கார்கள் விற்பனை ஆகும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)