பதிவு செய்த நாள்
09 அக்2018
23:30
புதிய சான்ட்ரோ கார்மாத இறுதியில் வருகிறதுசென்னை, அக். 10–இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த, சான்ட்ரோ காரை, மீண்டும் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக, ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவன தயாரிப்புகளில் ஒன்றான, சான்ட்ரோ, இந்தியாவில் மிகவும் வரவேற்பை பெற்ற கார். இந்த கார் தயாரிப்பு, 2014ம் ஆண்டு டிசம்பருடன் நிறுத்தப்பட்டது. அதன்பின், மீண்டும் இந்த மாத இறுதியில் சந்தைக்கு வர உள்ளது.முற்றிலும் புதிய சான்ட்ரோ கார், நான்கு சிலிண்டருடன் கூடிய, 1.1 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டதாகும். மேலும், கியர் இல்லாமல் எளிதாக ஓட்டும் வகையில், ஏ.எம்.டி., எனும், ‘ஆட்டோ மேனுவல் டிரான்ஸ்மிஷன்’ வசதி கொண்ட காரும் கிடைக்கும்.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ஒய்.கே.கூ., கூறியதாவது:எங்களது புதிய காருக்கு, சான்ட்ரோ என பெயரிட, ஆன்லைனில் பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் ஓட்டளித்துள்ளனர். முதன் முதலாக, சான்ட்ரோ கார், சென்னை தொழிற்சாலையில், 1998ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு, சந்தைக்கு அறிமுகம் ஆனது. குடும்பத்துக்கு ஏற்ற கார் என, லட்சக்கணக்கான இந்தியர்களால் பாராட்டப்பட்டது.
அறிமுகம் ஆகவுள்ள புதிய சான்ட்ரோ கார் மீதான மதிப்புகளை தக்கவைத்துக் கொள்வதோடு, நவீன வசதிகள் கொண்ட, ‘மாடர்ன் டால் பாய் கார்’ ஆகவும் இருக்கும்.புதிய சான்ட்ரோ காருக்கான முன்பதிவு, இன்று முதல், 22ம் தேதி வரை இருக்கும். முதல், 50 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, 11 ஆயிரத்து, 100 ரூபாய் முன்பதிவு கட்டணம் செலுத்தினால் போதுமானது.
புதிய சான்ட்ரோ கார், உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. மாதம் ஒன்றுக்கு, 8,000 முதல், 10 ஆயிரம் புதிய சான்ட்ரோ கார்கள் விற்பனை ஆகும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|