பதிவு செய்த நாள்
17 அக்2018
23:22
மும்பை : அக். 18–ரிசர்வ் வங்கி, 'பேடிஎம், மொபிக்விக்' போன்ற மொபைல் வாலட் சேவை தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
தற்போது, ஒரு மொபைல் வாலட் நிறுவனத்தின் வாடிக்கையாளர், மற்றொரு மொபைல் வாலட் நிறுவனத்தின் வாடிக்கையாளருக்கு பணம் அனுப்பவோ, பெறவோ அனுமதிஇல்லை. கே.ஒய்.சி.,இந்த கட்டுப்பாட்டை, ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது. மின்னணு பணப் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் நோக்குடன், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், முன்னதாக பணம் செலுத்தி, மொபைல் வாலட்டில் சேமிக்கும் வசதியை வழங்கும் 'பேடிஎம், மொபிக்விக்' போன்ற நிறுவனங்களின் மின்னணு பணப் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.
இந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், தங்கள் மொபைல் வாலட்டில் உள்ள தொகையை, வேறு மொபைல் வாலட் வாடிக்கையாளருக்கு அனுப்பலாம். இதற்கு, மொபைல் வாலட் நிறுவனங்கள், ‘கே.ஒய்.சி.,’ எனப்படும், வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் நடைமுறையை, கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி மேலும், ஒரு மொபைல் வாலட்டில் இருந்து, வேறொரு மொபைல் வாலட்டிற்கோ அல்லது வங்கி கணக்கிற்கோ பணம் அனுப்புவதானால், பொதுத் துறையைச் சேர்ந்த, என்.பி.சி.ஐ., நிறுவனத்தின், ஒருங்கிணைந்த பணப்பட்டுவாடா வழியை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உணவு, அன்பளிப்பு போன்றவற்றை பெறுவதற்காக, பல நிறுவனங்கள், பணமதிப்பு அட்டைகளை வழங்குகின்றன. இத்தகைய நிறுவனங்கள், ‘டெபிட், கிரெடிட்’ கார்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த பணப் பணப்பட்டுவாடா வசதியை பயன்படுத்தலாம்.
வாலட்டில் முன்கூட்டியே தொகையை பற்று வைத்து, அதில் இருந்து செலவழிக்கும் வசதியை வழங்கும் நிறுவனங்கள், பிற நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை வசதியை வழங்க, இயக்குனர் குழுவின் ஒப்புதல் பெற வேண்டும் எனவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பண மதிப்பு அட்டை வழங்கும், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், அங்கீகரிக்கப்பட்ட, ‘கிரெடிட், டெபிட்’ கார்டு நிறுவனங்களின், உறுப்பினராக இணையலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|