பதிவு செய்த நாள்
26 அக்2018
04:21
புதுடில்லி : ‘அவந்தி பைனான்ஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரியாக, ராகுல் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார்’ என, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
டாடா குழுமத்தின் தலைவர், ரத்தன் டாடாவும், ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் செயல் சாரா தலைவர், நந்தன் நிலேகனியும் இணைந்து, தொழில்நுட்ப வசதிகள் சென்றடையாத எளிய நிலையில் இருப்பவர்களுக்கு கடனுதவி வழங்க, ‘அவந்தி பைனான்ஸ்’ என்ற பெயரில், ஒரு நிறுவனத்தை துவங்கி உள்ளனர்.
இந்நிறுவனத்திற்கு, ரத்தன் டாடா, நந்தன் நிலேகனி ஆகியோரின், ‘தனிநபர் தொண்டு மூலதனம்’ மூலம் நிதியுதவி வழங்கப்படும். இதன் மூலம், கடனுதவி தேவைப்படுவோருக்கு கடன் வழங்கப்படும். இதையடுத்து, வசூல் செய்யப்படும் தொகை, மீண்டும், அவர்களது தொண்டு மூலதனத்திற்கே செலுத்தப்படும்.
நேற்று, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக, ராகுல் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்தாண்டு பாதியில், இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் முழுமையாக துவங்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பீஹார், உத்தரகண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில், இந்நிறுவனத்தின் சேவை, முதற்கட்டமாக துவங்கவுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|