2,000 பெட்ரோல் நிலையங்கள் ரிலையன்ஸ் அமைக்க திட்டம்2,000 பெட்ரோல் நிலையங்கள் ரிலையன்ஸ் அமைக்க திட்டம் ...  நாணய பரிமாற்ற முகாம்; ரூபாய் நோட்டுகள் மாற்றம் நாணய பரிமாற்ற முகாம்; ரூபாய் நோட்டுகள் மாற்றம் ...
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடையால் 5 லட்சம் பேருக்கு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2018
02:52

சென்னை : தமிழக அரசு, 100 சதவீதம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி அளித்து, சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு சிக்கலையும் ஏற்படுத்துவதாக தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் குற்றம் சாட்டிஉள்ளது.

இதுகுறித்து, சங்கத்தின் தலைவர், சங்கரன், தமிழ்நாடு, சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவர் பாபு, தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர், சென்னையில் அளித்த பேட்டி:தமிழகத்தில், வரும் ஜனவரி முதல், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர், ஜூன் 5ம் தேதி வெளியிட்டார்.

தற்போது சேகரிக்கப்படும், மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் குப்பைகளில், 80 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகின்றது.ஆனால், இதற்கு தடை விதித்து, 100 சதவீதம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள்.இதனால், எதிர்காலத்தில், 100 சதவீதம் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் குப்பைகள் தெருக்களிலே தேங்கும்.தற்போதைய தடை என்பது, சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு எதிரானது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் வசம் அனைத்து பிளாஸ்டிக் தொழிலையும், ஒப்படைக்கும் முயற்சியாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.

இதனால், தமிழகத்தில் உள்ள, 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களும், இதில் பணிபுரியும், 5 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு இழக்க நேரிடும்.எனவே, பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்பாக, மத்திய அரசு எடுக்க உள்ள இறுதி முடிவு வரும் வரை, பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பை, தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)