பதிவு செய்த நாள்
27 அக்2018
02:52
சென்னை : தமிழக அரசு, 100 சதவீதம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி அளித்து, சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு சிக்கலையும் ஏற்படுத்துவதாக தமிழ்நாடு, பாண்டி பிளாஸ்டிக் சங்கம் குற்றம் சாட்டிஉள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர், சங்கரன், தமிழ்நாடு, சிறு, குறு தொழில்கள் சங்கத் தலைவர் பாபு, தமிழ்நாடு சிறு தொழில்கள் சங்கத் தலைவர் கண்ணன் ஆகியோர், சென்னையில் அளித்த பேட்டி:தமிழகத்தில், வரும் ஜனவரி முதல், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர், ஜூன் 5ம் தேதி வெளியிட்டார்.
தற்போது சேகரிக்கப்படும், மறுசுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் குப்பைகளில், 80 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகின்றது.ஆனால், இதற்கு தடை விதித்து, 100 சதவீதம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி அளிக்கிறார்கள்.இதனால், எதிர்காலத்தில், 100 சதவீதம் மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் குப்பைகள் தெருக்களிலே தேங்கும்.தற்போதைய தடை என்பது, சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு எதிரானது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் வசம் அனைத்து பிளாஸ்டிக் தொழிலையும், ஒப்படைக்கும் முயற்சியாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.
இதனால், தமிழகத்தில் உள்ள, 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்களும், இதில் பணிபுரியும், 5 லட்சம் பேரும் வேலைவாய்ப்பு இழக்க நேரிடும்.எனவே, பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்பாக, மத்திய அரசு எடுக்க உள்ள இறுதி முடிவு வரும் வரை, பிளாஸ்டிக் தடை என்ற அறிவிப்பை, தமிழக அரசு தள்ளி வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|