பதிவு செய்த நாள்
27 அக்2018
02:53
சென்னை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி நடத்திய நாணய பரிமாற்ற முகாம்கள் வழியாக, 1.9 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி சார்பில், தமிழகம் முழுவதும், 359 நடமாடும் நாணயப் பரிமாற்ற முகாம்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில், நடமாடும் நாணயப் பரிமாற்றம் நடத்திய முதல் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி. ரிசர்வ் வங்கியின் சுத்தமான நோட்டு கொள்கையின் படி, இந்த முகாம்கள் நடத்தப்பட்டன.
தமிழகத்தில், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தஞ்சை, நாகப்பட்டினம், புதுச்சேரி உட்பட, பல்வேறு பிரதான நகரங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம்கள் மூலம், 6,200 வாடிக்கையாளர்கள் பயனடைந்தனர்.நாணயங்கள் மற்றும் புதிய ரூபாய் நோட்டுகள் என, 1.9 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் இதில் மாற்றப்பட்டன. மேலும், நாடு முழுவதும், 2,536 முகாம்கள் ஒரே நாளில் நடத்தப்பட்டன. இதன் மூலம் மொத்தம், 36 ஆயிரம் வாடிக்கையாளர்கள், 40 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மாற்றி பயனடைந்துள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|