பூர்விகா மொபைல்ஸ்  ரூ.5 கோடி பரிசு மழை பூர்விகா மொபைல்ஸ் ரூ.5 கோடி பரிசு மழை ...  மடங்கும் திரையுடன் சாம்சங் ஸ்மார்ட் போன் மடங்கும் திரையுடன் சாம்சங் ஸ்மார்ட் போன் ...
மருத்துவ குணத்தோடு வழங்குகிறோம்:
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2018
01:07

சென்னை: ‘‘மக்களின் ஆரோக்கியத்தை காக்க, சமையல் பொருட்களை, மருத்துவ குணத்தோடு, அவர்களால் வாங்க முடிந்த விலையில் வழங்குகிறோம்,’’ என, ‘ஆச்சி மசாலா’ நிறுவனர், ஏ.டி.பத்மசிங் ஐசக் தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:நாம் அன்றாடம் பயன்படுத்தும், உணவு பொருட்களான, மஞ்சள், மிளகு, தனியா, வெந்தயம், சீரகம், கிராம்பு, மிளகாய் ஆகியவற்றில், அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. மக்களின் ஆரோக்கியத்தை காக்க, சமையல் பொருட்களை, அதே மருத்துவ குணத்தோடு, அனைத்து மக்களும் வாங்க முடிந்த விலைக்கு வழங்குகிறோம். அவை, மருந்தாக மட்டுமல்ல, ருசி நிறைந்த விருந்தாகவும் அமைய வேண்டும் என, ஆச்சி மசாலா விரும்புகிறது.உணவு பொருட்கள் தயாரிப்பு துறையில், 1995ல் அடியெடுத்து வைத்த, ஆச்சி மசாலா உணவு பொருள் நிறுவனம், மக்களின் ஒத்துழைப்போடு, இன்று, இந்திய அளவில், தன்னிகரற்ற நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.முதலில், தரமான விளைபொருட்களை தேடி, நாடு முழுவதும் விளைவிக்கப்படும் இடங்களுக்கு நேரடியாக செல்கிறோம். அவற்றை, விவசாயிகளிடம் இருந்து, டன் கணக்கில் வாங்கி, எடுத்து வருகிறோம். பின், இயற்கை தன்மை, எந்த விதத்திலும் குறைந்து விடாதபடி, நவீன முறைகளை பயன்படுத்தி பாதுகாக்கிறோம்.மூன்றாவதாக, அதை சரியான முறையில், ‘சோலார் சிஸ்டம்’ வாயிலாக உலர்த்தி, பக்குவமாக துாளாக்குகிறோம். இதுதான், மிக முக்கியமான கட்டம். அதாவது, மிளகாய், மிளகு, வெந்தயம், தனியா போன்ற தானியங்களை, வழக்கமான முறையில் அரைக்கும்போது சூடாகி, அவற்றின் இயற்கையான மருத்துவ குணங்கள் மற்றும் அரோமா ஆற்றல் நசிந்து விடும். அவ்வாறு, நசித்து விடக் கூடாது என்பதற்காக, ‘கோல்டு பிரஸ் கிரைண்டிங்’ என்ற நவீன முறை, எங்களால் பின்பற்றப்படுகிறது.அதற்கென, விசேஷமாக வடிவமைக்கப்பட்ட, உலக புகழ்பெற்ற இயந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதால், அவற்றின், இயற்கை தன்மை மாறாமல், குளிர்ச்சியான முறையில் அரைக்கப்படுகிறது.அதன் வாயிலாக, எங்களால் தயாரிக்கப்படும் அனைத்து உணவு பொருட்களிலும், மருத்துவ ஆற்றல் குறையாத அளவிற்கு கவனித்து கொள்கிறோம்.நிறம், மணம், ருசி போன்றவையும், சிறப்பாக இருக்கும் வகையில், அவற்றை, ‘பேக்கிங்’ செய்யும் போதும், முழு கவனம் செலுத்துகிறோம்.மேற்கண்ட செயல்முறைகள் காரணமாக, ஆச்சி மசாலா வகைகள், மருந்தாகவும், விருந்தாகவும், மக்களுக்கு பயன்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)