பதிவு செய்த நாள்
02 நவ2018
23:50
புதுடில்லி:‘அமேசான், பிளிப்கார்ட்’ போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள், குறைந்த விலையில் மொபைல் போன்களை விற்பதால், கடைகளில் விற்பனை குறைந்து, மூடப்படுவதாக, இந்திய செல்போன் மற்றும் மின்னணு நிறுவனங்கள் கூட்டமைப்பான, ஐ.சி.இ.ஏ., தெரிவித்துள்ளது.இதன் தலைவர், பங்கஜ் மொகிந்த்ரு கூறியதாவது:
அமெரிக்காவில், வலைதள நிறுவனங்களின் மொபைல் போன் விற்பனை, 2 சதவீத அளவிற்குத் தான் உள்ளது.இந்தியாவில், கடந்த மாதம், 45 – -50 சதவீத விற்பனை நடந்துள்ளது. மின்னணு வணிக நிறுவனங்கள், 62 சதவீதம் வரை தள்ளுபடி சலுகைகள் அளிக்கப்படுவது தான், வலைதளங்களில் மொபைல் போன் விற்பனை உயர காரணம்.கடந்த ஓராண்டில், நாடு முழுவதும், 45 ஆயிரம் மொபைல் போன் கடைகள் மூடப்பட்டன.
நொய்டாவில் இருந்த, 1,148 கடைகளில், 950 கடைகள் தான் தற்போது இயங்குகின்றன. மின்னணு வணிக நிறுவனங்களின் இத்தகைய போக்கு குறித்து, எங்கள் அமைப்பிலேயே, மாறுபட்ட கருத்து உள்ளது.மத்திய அரசு, நுகர்வோருக்கு ஆதரவாக உள்ளதா அல்லது வர்த்தகர்கள் பக்கம் உள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நுகர்வோருக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என விரும்பினால், நாங்கள் மவுனமாகி விடுவோம். தார்மீக நெறிகள் காக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|