பதிவு செய்த நாள்
02 நவ2018
23:53
சென்னை:வாடிக்கையாளர்களின் சிறிய செலவுகளுக்கான பணத்திற்காக, ‘உடனடி டிஜிட்டல் கடன்’ வசதியை, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, இவ்வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பு:வாடிக்கையாளர்களுடைய சிறு சிறு செலவுகளுக்கான பண தேவைக்காக, உடனடியான காகிதமற்ற டிஜிட்டல் முறையில் கடன் கொடுக்கும் சேவையை வங்கி துவங்கி உள்ளது. இதற்காக புதிய முயற்சியாக, உடனடி டிஜிட்டல் கடன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.‘பே லைட்டர் பை ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம், வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் ஷாப்பிங் செய்வது, பில் கட்டுவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் படி, தகுதி உள்ள வாடிக்கையாளர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். இந்த வசதியை, வங்கியின் மொபைல் செயலி மூலம் பெற முடியும். 45 நாட்கள் வரை வட்டியில்லாத முறையில், 5,000 முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|