'ஐபோன்' விற்பனை விபரம் 'ஆப்பிள்' வழங்க மறுப்பு 'ஐபோன்' விற்பனை விபரம் 'ஆப்பிள்' வழங்க மறுப்பு ...  தரமற்ற டி.எம்.டி., கம்பி புழக்கம்: மத்திய அரசு விசாரிக்க முடிவு தரமற்ற டி.எம்.டி., கம்பி புழக்கம்: மத்திய அரசு விசாரிக்க முடிவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பிரகாசமான வர்த்தக வாய்ப்புகள் காத்திருக்கு இந்திய நிறுவனங்கள் திடமான நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2018
23:56

மும்பை:வரும் ஆண்டுகளில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், வர்த்தக வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக, இந்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


இந்தியா உட்பட, 34 நாடுகளைச் சேர்ந்த, 8,650 நிறுவனங்களின் வர்த்தக நம்பிக்கை குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.நுகர்வோர்அதில் கூறப்பட்டுள்ளதாவது:எதிர்கால வர்த்தகம் குறித்த நம்பிக்கை, உலக நாடுகளின் சராசரியை விட, இந்திய தொழில் நிறுவனங்களிடம் அதிகம் உள்ளது.


இந்த ஆய்வில், 96 சதவீத நிறுவனங்கள், சர்வதேச வர்த்தகச் சூழல் மேம்படும் என, தெரிவித்துள்ளன. 94 சதவீத நிறுவனங்களிடம், அவற்றின் வளர்ச்சி குறித்த தன்னம்பிக்கை அதிகம் காணப்பட்டது.இந்தியாவை பொறுத்தவரை, 97 சதவீத நிறுவனங்கள், வரும் ஆண்டுகளில், உள்நாடு மற்றும் வெளிநாட்டில், வர்த்தக வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளன.சர்வதேச வர்த்தக சூழல், சந்தை வாய்ப்பு, சுய முன்னேற்றம் ஆகிய மூன்று அம்சங்களில் இந்தியா, சர்வதேச சராசரியை விஞ்சி நிற்கிறது.


அதிக அளவிலான தொழில்நுட்பங்களை புகுத்துவது, தயாரிப்பு பொருட்களின் தேவை அதிகரிப்பு, மின்னணு வணிக நிறுவனங்களின் வளர்ச்சி ஆகிய மூன்று அம்சங்கள், தங்கள் வர்த்தக வளர்ச்சிக்கு துணை நிற்கும் என, இந்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.மேலும், சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கை, புதிய தொழில்நுட்பங்களின் அறிமுகம், நுகர்வோர் நம்பிக்கை ஆகியவையும், தங்கள் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என, இந்தியர்கள் உறுதியாக நம்புகின்றனர்.


உலக நாடுகள், சுய வர்த்தகப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக, பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இது, சர்வதேச சராசரியை விட அதிகம்.அமெரிக்காஇந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா ஆகிய மூன்று நாடுகள் முன்னணியில் உள்ளன. வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் வழங்கும் என, இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளால், வர்த்தகம் பாதிப்பதில்லை என, பெரும்பாலானோர் கூறிஉள்ளனர்.அதேசமயம், 31 சதவீதம் பேர், வர்த்தக உரிமத்திற்கான நடைமுறை சிக்கல்களால், தொழில் புரிவது சிரமமாக உள்ளதாக தெரிவித்துஉள்ளனர்.ஐந்தில், இரண்டு நிறுவனங்கள், ஒழுங்கு முறை கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கள் வர்த்தகத்தில் போட்டித் திறன் அதிகரிப்பதாகவும், மூன்றில் ஒரு நிறுவனம், வர்த்தக மதிப்பு உயர்வதாகவும் கூறியுள்ளன.


துறை வாரியாக, தாராள வர்த்தகம் மேற்கொண்டால், அடுத்த மூன்று ஆண்டுகளில், தங்கள் வர்த்தகம் அதிகரிக்கும் என, 67 சதவீத இந்திய நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.உலக நாடுகள், வர்த்தகத்தில் சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அதிகரித்துள்ளது. இது, கவலை அளிக்கும் அம்சம் என்றாலும், உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா தொடர்ந்து நீடித்து, நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும்.


ரஜத் வர்மா, தலைவர்,வணிக வங்கி பிரிவு, எச்.எஸ்.பி.சி., இந்தியா

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)