டிஸ்கவர் – 100 சி.சி., அறிமுகத்தில் தவறு செய்து விட்டேன்: ராஜீவ் பஜாஜ் டிஸ்கவர் – 100 சி.சி., அறிமுகத்தில் தவறு செய்து விட்டேன்: ராஜீவ் பஜாஜ் ...  ‘ஜியோ’ போட்டியால் கதறும் ‘வோடபோன் – ஐடியா’ ‘ஜியோ’ போட்டியால் கதறும் ‘வோடபோன் – ஐடியா’ ...
பொது தேர்தலை முன்னிட்டு போன் கட்டணம் உயர வாய்ப்பில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2018
23:35

புதுடில்லி : ‘இந்தியாவில், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், மொபைல் போன் சேவை கட்டணங்கள் உயர வாய்ப்பில்லை’ என, ‘பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத் தேர்தலையொட்டி, தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், சந்தாதாரர் கட்டணத்தை உயர்த்தாது என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜியோ :
குறிப்பாக, முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ நிறுவனம், கட்டணத்தை உயர்த்த வாய்ப்பில்லை. இந்நிறுவனம், தொலை தொடர்பு துறையில், 40 கோடி சந்தாதாரர்களை எட்டி, முதலிடத்தை பிடிக்கும் வரை, கட்டணத்தை உயர்த்தாது. இந்நிறுவனம், கண்ணாடி நாரிழை கம்பிவடம் மூலம், வீடுகளுக்கு தரமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளை, மாதம், 1,400 ரூபாய் கட்டணத்தில் வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில், இத்திட்டத்தில், ஐந்து கோடி வாடிக்கையாளர்கள் சேரலாம் என, தெரிகிறது.

இலக்கு :
‘பார்தி ஏர்டெல்’ நிறுவனம், மாதம், சராசரியாக, 500 ரூபாய் கட்டணத்தில், மூன்று கோடி சந்தாதாரர்களை ஈர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘4ஜி’ தொழில்நுட்ப, ‘பியூச்சர்’ மொபைல் போன் பயன்பாடு பெருகி வருவதும், அதற்கான ஒருங்கிணைந்த சேவையில், ஆர்ஜியோ வலுவாக உள்ளதும், அந்நிறுவனத்திற்கு சாதகம் எனலாம்.எனவே, அடுத்த, 6 – 12 மாதங்களுக்கு, இப்பிரிவில், ஆர்ஜியோவின் ஆதிக்கம் தொடரும்.

இந்நிறுவனம், அடுத்த ஆறு மாதங்களில், தொலை தொடர்பு சேவை கோபுரங்களின் எண்ணிக்கையை, இரண்டு லட்சத்தில் இருந்து, 2.36 லட்சமாகவும்; அதற்கடுத்த ஓராண்டில், 3.20 லட்சமாகவும் உயர்த்த, இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல் மூன்று :
இந்திய மொபைல் போன் சேவையில், 35 சதவீத பங்களிப்புடன், 40 கோடி சந்தாதாரர்களுடன், ‘வோடபோன் – ஐடியா’ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், பார்தி ஏர்டெல், ஆர்ஜியோ ஆகியவை, முறையே, 33 கோடி மற்றும், 26 கோடி சந்தாதாரர்களுடன் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)