பதிவு செய்த நாள்
22 நவ2018
23:39
புதுடில்லி : சரக்கு போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைத்து, செலவைக் குறைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர், டில்லியில், சரக்கு போக்குவரத்து மாநாடு மற்றும் கண்காட்சியை துவக்கி வைத்து பேசியதாவது: சாலை, ரயில், கப்பல் மற்றும் விமானம் வாயிலான சரக்கு போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இதன் மூலம், சரக்கை விரைவாக, குறைந்த செலவில் கொண்டு செல்ல முடியும்.
வர்த்தகம் மற்றும் தயாரிப்பு துறையின் வளர்ச்சிக்கு, சரக்கு போக்குவரத்து இன்றியமையாதது. அதை மேம்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் முன்னேறும். அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், இந்திய சரக்கு போக்குவரத்து துறைக்கு, ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை வழங்கியுள்ளது.அதை பயன்படுத்திக் கொள்ள, சரக்கு போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டம் உதவும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சரக்கு போக்குவரத்து செலவு, 14 சதவீதமாக உள்ளது. இது, முன்னேறிய நாடுகளில், 7 – -8 சதவீத அளவிற்கே உள்ளது.இந்திய சரக்கு போக்குவரத்து துறை, 21 ஆயிரத்து, 500 கோடி டாலர் மதிப்புடன், ஆண்டுக்கு, 10 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|