சிறிய நிறுவனங்களில் வரி ஏய்ப்பு சிறிய நிறுவனங்களில் வரி ஏய்ப்பு ... அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் இருக்கும் அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் ... ...
ரிசர்வ் வங்கி நிதி தேவையில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 நவ
2018
00:47

மும்பை: ‘‘அடுத்த ஆறு மாதங்களுக்கு, ரிசர்வ் வங்கியிடம் இருந்து, மத்திய அரசுக்கு எந்த நிதியும் தேவைப்படாது,’’ என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியிடம், 9.59 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி உள்ளது. இதில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்கவும், பொதுத் துறை வங்கிகளின் மூலதனத்தை உயர்த்தவும், மத்திய அரசு, 3.57 லட்சம் கோடி ரூபாய் கோருவதாக தகவல் வெளியானது.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, பொதுத் தேர்தலை முன்னிட்டு, மத்திய அரசு இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.இதையடுத்து, ‘ரிசர்வ் வங்கியிடம் எந்த நிதியும் கோரவில்லை’ என, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.இருந்தபோதிலும், மோடி அரசு, ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தில் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின.முன்னாள் மத்திய நிதியமைச்சர், ப.சிதம்பரம், ‘மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அதன் கையிருப்பில் அதிகாரம் செலுத்த திட்டமிட்டுள்ளது’ என, சமீபத்தில் குற்றஞ்சாட்டியிருந்தார்.இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தனியார், ‘டிவி’க்கு அளித்த பேட்டி:ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையை, மத்திய அரசு மதிக்கிறது. அதில் தலையிட விரும்பவில்லை.அதேசமயம், ஒரு சில துறைகளில், பணப் புழக்கம் குறைந்தாலோ அல்லது கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டாலோ, அப்பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.அதன்படி, மத்திய அரசு, பிரச்னைகளை ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளது.அடுத்த ஆறு மாதங்களுக்கு, ரிசர்வ் வங்கியின் பணம் மத்திய அரசுக்கு தேவைப்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)