அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் இருக்கும்அரிசி ஏற்றுமதிக்கு வரி சலுகை அறிவிப்பு : நான்கு மாதங்களுக்கு அமலில் ... ... முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? முதலீட்டை வெற்றி பாதையில் நகர்த்துவது எப்படி? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சிக்கல் இல்லாமல், ‘கார் கடன்’ பெறுவதற்கான வழிமுறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2018
06:59

சொந்த வீட்டு கனவுக்கு அடுத்தபடியாக பலரும் முக்கியமாக கருதுவது, சொந்தமாக கார் வாங்குவதை தான். நவீன வாழ்க்கையில் காருக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கார் வாங்க வங்கி கடன் பெறலாம் என்றாலும், செயல்முறை சிக்கல் இல்லாமல், தாமதம் இல்லாமல் கடன் பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிகள் இதோ:

கிரெடிட் ஸ்கோர் :
கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் முதலில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அறிய வேண்டும். கடன் தகுதியை தீர்மானிக்கும் இந்த மூன்று இலக்க ஸ்கோர், 750 என்ற அளவில் இருந்தால் நல்லது. அதற்கு கீழ் இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம் அல்லது வட்டி விகிதம் அதிகமாகலாம். குறைவான கிரெடிட் ஸ்கோர் எனில், முதலில் அதை சரி செய்ய வேண்டும்.

முன்பணம் :
பெரும்பாலான வங்கிகள் கார் விலையில், 20 சதவீத தொகையை செலுத்துமாறு கூறலாம். எனவே இந்த முன்பணம் மற்றும் தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். ஒரு சில வங்கிகள், 100 சதவீத தொகையை கடனாக வழங்கினாலும், ஒரு பகுதியை நீங்கள் வழங்குவது திருப்பி செலுத்துவதை எளிதாக்கும்.

வருமான வரலாறு :
உங்கள் வருமானம் மற்றும் பணி விபரங்கள் முக்கியமானவை. வங்கிகள் குறிப்பிட்ட அம்சங்களை கடன் தகுதியாக வலியுறுத்தலாம். சம்பளம் வாங்கும் ஊழியர் எனில் கார் கடன் பெற குறைந்தது, இரண்டு ஆண்டுகள் பணியில் இருக்க வேண்டும். சுயதொழில் செய்வோர் எனில் அதற்கேற்ற வருவாயை கொண்டிருக்க வேண்டும்

கடன் தொகை :
விரும்பிய காரை வாங்குவது முக்கியம் என்றாலும், அதைவிட முக்கியம் கடன் தவணையால் வாழ்வியல் முறை அல்லது இலக்குகள் பாதிக்கக் கூடாது. எனவே, திருப்பி செலுத்தக்கூடிய அளவிலான கடனை தான் பெற வேண்டும். இதற்கான அளவை கணக்கிட்டு அதற்கேற்ற கடனை தேர்வு செய்ய வேண்டும்.

கூட்டு விண்ணப்பம் :
பொதுவாக கடனுக்கு கூட்டாக விண்ணப்பித்தால் அனுமதி கிடைப்பது எளிது. கார் கடனுக்கும் இது பொருந்தும். எனவே, கூட்டு விண்ணப்பதாரரோடு கடனுக்கும் விண்ணப்பிக்கலாம். இருவரது வருமானமும் சேர்த்து கணக்கில் கொள்ளப்படும். குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாழ்க்கை துணையுடன் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)