அறைக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசக்கூடாது; ரிசர்வ் வங்கிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா, ‘குட்டு’ அறைக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசக்கூடாது; ரிசர்வ் வங்கிக்கு துணை ... ...  வியாபாரிகளுக்கு விரைவில் ‘ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வியாபாரிகளுக்கு விரைவில் ‘ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் ...
பார்லி.,யில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கிறார் உர்ஜித்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 நவ
2018
06:28

புதுடில்லி : பார்லிமென்ட் நிலைக் குழு கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர், வீரப்ப மொய்லி தலைமையில், நிதித் துறைக்கான, பார்லி., நிலைக் குழு முன், உர்ஜித் படேல் நேற்று ஆஜராகி, உறுப்பினர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நான்கு ஆண்டுகள் காணாத அளவிற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது குறைந்துள்ளதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும் என, உர்ஜித் படேல் தெரிவித்தார்.

கடன் வளர்ச்சி, 15 சதவீதமாக உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பொருளாதாரத்தில், தற்காலிக தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘ஜி – 20’ கூட்டமைப்பு முடிவின்படி, ‘பேசல் – 3’ விதிமுறையை பின்பற்றி, வங்கிகள், மூலதன இருப்பு விகிதத்தை பராமரிக்க நேர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

முதன் முறையாக, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி சட்டம், பிரிவு – 7ஐ பயன்படுத்தியது; வாராக் கடன்; ரிசர்வ் வங்கி சுதந்திரத்தில் மத்திய அரசின் தலையீடு உள்ளிட்ட, சர்ச்சை கேள்விகளுக்கு, நேரடியாக எதுவும் கூறாமல், சாமர்த்தியமாக பதில் அளித்தார்.

நிலைக் குழு உறுப்பினர்கள், ஏராளமான கேள்விகளை கேட்டதால், அவற்றுக்கு, 10 – 15 நாட்களில், எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாக, உர்ஜித் படேல் தெரிவித்தார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)