பதிவு செய்த நாள்
28 நவ2018
06:28
புதுடில்லி : பார்லிமென்ட் நிலைக் குழு கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாக, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர், வீரப்ப மொய்லி தலைமையில், நிதித் துறைக்கான, பார்லி., நிலைக் குழு முன், உர்ஜித் படேல் நேற்று ஆஜராகி, உறுப்பினர்களின் சரமாரியான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நான்கு ஆண்டுகள் காணாத அளவிற்கு உயர்ந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது குறைந்துள்ளதால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நன்கு இருக்கும் என, உர்ஜித் படேல் தெரிவித்தார்.
கடன் வளர்ச்சி, 15 சதவீதமாக உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை, பொருளாதாரத்தில், தற்காலிக தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘ஜி – 20’ கூட்டமைப்பு முடிவின்படி, ‘பேசல் – 3’ விதிமுறையை பின்பற்றி, வங்கிகள், மூலதன இருப்பு விகிதத்தை பராமரிக்க நேர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
முதன் முறையாக, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி சட்டம், பிரிவு – 7ஐ பயன்படுத்தியது; வாராக் கடன்; ரிசர்வ் வங்கி சுதந்திரத்தில் மத்திய அரசின் தலையீடு உள்ளிட்ட, சர்ச்சை கேள்விகளுக்கு, நேரடியாக எதுவும் கூறாமல், சாமர்த்தியமாக பதில் அளித்தார்.
நிலைக் குழு உறுப்பினர்கள், ஏராளமான கேள்விகளை கேட்டதால், அவற்றுக்கு, 10 – 15 நாட்களில், எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாக, உர்ஜித் படேல் தெரிவித்தார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|