பார்லி.,யில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கிறார் உர்ஜித்பார்லி.,யில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கிறார் உர்ஜித் ...  ஏ.டி.எம்.,கள் மூடப்படாது ஏ.டி.எம்.,கள் மூடப்படாது ...
வியாபாரிகளுக்கு விரைவில் ‘ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2018
00:27

ஈரோடு: ‘‘ஈரோடு பகுதியில், மஞ்சள் உள்ளிட்ட ஏலங்களில் பங்கேற்போருக்கு விரைவில், ‘ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம்’ என்ற, ‘சிங்கிள் யூனிபைடு லைசென்ஸ்’ வழங்க உள்ளது.‘‘இதனால், தேசிய அளவில், ‘இ – நாம்’ சந்தைகளில், விளை பொருட்களை ஏலம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்,’’ என, ஈரோடு மாவட்ட விற்பனை குழு செயலர் மற்றும் வேளாண் துணை இயக்குனர், சின்னசாமி தெரிவித்தார்.மேலும், அவர் கூறியதாவது:‘தேசிய வேளாண் சந்தை’ எனப்படும், இ – நாம் திட்டத்தில் தேசிய அளவில், 550க்கும் மேற்பட்ட சந்தைகள் இணைக்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில் முதற்கட்டமாக, 17 ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் இணைகின்றன.இதில், ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக, அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மக்காசோளம், எள், கொப்பரை தேங்காயும், பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மஞ்சளும் இ – நாம் திட்டம் மூலம் கொண்டு வரப்படுகின்றன. கோபி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காயும், சத்தியமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மக்காசோளம் மற்றும் கொப்பரை தேங்காயும், இத்திட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.இத்திட்டத்தில் சோதனை முயற்சியாக, பெருந்துறையில், 4.5 கோடி ரூபாயில், மஞ்சளில் கல் நீக்குதல், தரம் பிரித்தல், பேக்கிங் செய்தல், மஞ்சளில் உள்ள குர்குமின் அளவு கண்டறிதலுக்கான ஆய்வகம் ஆகியவை அமையும் பணி நடக்கிறது.இப்பணிகள் முடியும்போது, இ – நாம் திட்ட சந்தை போர்ட்டலில், பெருந்துறை மஞ்சளின் போட்டோ, தரம், குர்குமின் அளவு, குறைந்தபட்ச விலை போன்றவற்றை குறிப்பிடலாம். அப்போது, தேசிய அளவில், எங்கிருந்தும், இந்த மஞ்சளை ஏலம் எடுத்து, அதற்கான பணத்தை செலுத்தி, மஞ்சளை பெற்று செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம், மஞ்சளின் தரத்துக்கு ஏற்ப, விவசாயிக்கு அதிகபட்சமான விலை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)