பதிவு செய்த நாள்
29 நவ2018
00:27
ஈரோடு: ‘‘ஈரோடு பகுதியில், மஞ்சள் உள்ளிட்ட ஏலங்களில் பங்கேற்போருக்கு விரைவில், ‘ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம்’ என்ற, ‘சிங்கிள் யூனிபைடு லைசென்ஸ்’ வழங்க உள்ளது.‘‘இதனால், தேசிய அளவில், ‘இ – நாம்’ சந்தைகளில், விளை பொருட்களை ஏலம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்,’’ என, ஈரோடு மாவட்ட விற்பனை குழு செயலர் மற்றும் வேளாண் துணை இயக்குனர், சின்னசாமி தெரிவித்தார்.மேலும், அவர் கூறியதாவது:‘தேசிய வேளாண் சந்தை’ எனப்படும், இ – நாம் திட்டத்தில் தேசிய அளவில், 550க்கும் மேற்பட்ட சந்தைகள் இணைக்கப்படுகின்றன. இதில், தமிழகத்தில் முதற்கட்டமாக, 17 ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் இணைகின்றன.இதில், ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக, அந்தியூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மக்காசோளம், எள், கொப்பரை தேங்காயும், பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மஞ்சளும் இ – நாம் திட்டம் மூலம் கொண்டு வரப்படுகின்றன. கோபி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காயும், சத்தியமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், மக்காசோளம் மற்றும் கொப்பரை தேங்காயும், இத்திட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.இத்திட்டத்தில் சோதனை முயற்சியாக, பெருந்துறையில், 4.5 கோடி ரூபாயில், மஞ்சளில் கல் நீக்குதல், தரம் பிரித்தல், பேக்கிங் செய்தல், மஞ்சளில் உள்ள குர்குமின் அளவு கண்டறிதலுக்கான ஆய்வகம் ஆகியவை அமையும் பணி நடக்கிறது.இப்பணிகள் முடியும்போது, இ – நாம் திட்ட சந்தை போர்ட்டலில், பெருந்துறை மஞ்சளின் போட்டோ, தரம், குர்குமின் அளவு, குறைந்தபட்ச விலை போன்றவற்றை குறிப்பிடலாம். அப்போது, தேசிய அளவில், எங்கிருந்தும், இந்த மஞ்சளை ஏலம் எடுத்து, அதற்கான பணத்தை செலுத்தி, மஞ்சளை பெற்று செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம், மஞ்சளின் தரத்துக்கு ஏற்ப, விவசாயிக்கு அதிகபட்சமான விலை கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|