வியாபாரிகளுக்கு விரைவில் ‘ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வியாபாரிகளுக்கு விரைவில் ‘ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் ...  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 நாடுகள் பங்குதாரர்கள்   உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5 நாடுகள் பங்குதாரர்கள் ...
ஏ.டி.எம்.,கள் மூடப்படாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2018
00:27

சென்னை: ‘‘ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஏ.டி.எம்.,கள் வழக்கம் போல் இயங்கும்; அவற்றை மூடும் எண்ணம் இல்லை,’’ என, வங்கியின் செயல் இயக்குனர் அனுப் பக் ஷி தெரிவித்தார்.சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தமிழகத்தில் தன் சில்லரை கடன் உதவியை, 40 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் வழியாக நடப்பு நிதியாண்டில் கடன் உதவி அளவு, 13 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நுகர்வோர் கடன், வீட்டுக் கடன் மற்றும் விவசாயக் கடன் உதவி போன்ற பிரிவுகளில், துரிதமான வளர்ச்சியை எட்டும் வகையில், வங்கி செயல்பட இருக்கிறது.நுகர்வோர் கடன்களை, 50 சதவீதம் அதிகரிக்கும் வகையில் செயல்படுவதன் மூலம், 5,000 கோடி ரூபாய் வளர்ச்சி எட்டப்படும். வீட்டுக் கடன் உதவியில், 40 சதவீதம் அதிகரித்து, 3,700 கோடி ரூபாய் வளர்ச்சி எட்டப்படும். இதேபோன்று, விவசாயம் தொடர்பான கடன் உதவியில், 30 சதவீதம் அதிரித்து, 4,300 கோடி ரூபாய் வளர்ச்சி எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில், தமிழகத்தில் நுகர்வோர் கடன்கள் கணிசமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் வலுவுடன் இருப்பதால், நடப்பு நிதியாண்டிலும் சில்லரை கடன் உதவி அளிப்பது, 40 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என, நம்புகிறோம்.இதற்காக பல்வேறு உத்திகளை பின்பற்றுகிறோம். வீட்டுக் கடன் வழங்குவதில், கடன் செயல்பாட்டு மையங்களை அதிகப்படுத்தி உள்ளோம்.தற்போது, பணப் பரிவர்த்தனைகள், 90 சதவீதம் டிஜிட்டல் முறையிலும், 10 சதவீதம் வங்கி கிளைகளிலும் நடைபெறுகின்றன. எங்கள் வங்கிக்கு, நாடு முழுவதும், 16 ஆயிரம், ஏ.டி.எம்.,கள் செயல்படுகின்றன.தமிழகத்தில், 1,525 ஏ.டி.எம்.,கள் செயல்படுகின்றன. இவையனைத்தும் வழக்கம் போல் செயல்படும். இவற்றை மூடும் எண்ணம் இல்லை. பொருளாதார நடவடிக்கைகள் அதிகம் உள்ள பகுதிகளில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் செயல்பாடு கண்டிப்பாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)