பதிவு செய்த நாள்
02 டிச2018
23:32
வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவதை அதிகரித்திருக்கும் நிலையில், வீடுகளின் விற்பனை
அந்த அளவு அதிகரிக்காத சூழலே, ரியல் எஸ்டேட் துறையில் நிலவுகிறது.பல்வேறு காரணங்களால்,ரியல் எஸ்டேட் துறை, கடந்த சில ஆண்டுகளாக மந்தமான நிலையை எதிர்கொண்டு வருகிறது.
நாட்டில் எட்டு முக்கிய நகரங்களில் விற்காமல் இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை, செப்டம்பர் வரையிலான காலாண்டில், 1 சதவீதம் அதிகரித்து உள்ளதாக, ‘லயாசஸ் போராஸ்’
நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.எனினும், 2014ம் ஆண்டுக்கு பிறகு, வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவது, மற்ற கடன்களைவிட அதிகரித்திருப்பதாக, ரிசர்வ் வங்கி புள்ளி விபரங்கள் மூலம் அறிய முடிகிறது. செப்டம்பர் காலாண்டில் நிலுவையில் உள்ள வீட்டுக்கடன், 15.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
குடியிருப்பு வீடுகள் விற்பனை தேக்கம், வீட்டுக்கடன் வினியோகத்திலும் ஒரு தேக்கத்தை
உருவாக்கியிருக்க வேண்டும். இவ்வாறு நிகழவில்லை. வீட்டுக்கடன் வழங்குவது அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ப வீடுகளின் விற்பனை உயராதது ஏன் எனும் கேள்வி இதனால் எழுந்துள்ளது.
வீட்டுக்கடன் வளர்ச்சி, வீடுகள் வாங்கப்பட்டு வருவதை உணர்த்துகிறது. இதன் பின்னே உள்ள போக்கை கூர்ந்து கவனித்தால், பலரும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதை புரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில், முதலீடு நோக்கில் வீடுகளை வாங்கியவர்கள், எதிர்பார்த்த திசையில் வீடுகளின் விலை அமையாததால், அவற்றை விற்று விட்டு வெளியேறும் நிலையும் இருக்கிறது.
இவர்கள் விலையில் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைப்பிடிக்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த வகை வீடுகளும் வாங்கப்பட்டு வருகின்றன. பொதுவாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், முடியும் தருவாயில் உள்ள வீடுகளை வாங்கும் போக்கு காணப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|