பதிவு செய்த நாள்
02 டிச2018
23:33
இந்திய நிறுவனங்கள் ஊழியர்களின் நலனை பாதுகாப்பதில், அதிக கவனம் செலுத்தி வருவது, ‘இந்திய ஆரோக்கியம் மற்றும் நலம்’ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அமைப்பான, ‘வில்ஸ் டவர்ஸ் வாட்சன்’ பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்
மத்தியில், இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வில், நிறுவனங்கள்,
ஊழியர்கள் நலனுக்கான திட்டங்களில் கவனம் செலுத்தி வருவது தெரிய
வந்துள்ளது.
நிறுவனங்கள், ஊழியர்கள் உடல்நலம் சார்ந்த
விஷயங்களை, 62 சதவீதம் முக்கியமாக கருதுகின்றன, மன அழுத்தத்தை,
55 சதவீதம் முக்கியமாக கருதுகின்றன. நிதி நலன், 27 சதவீதம்
முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆரோக்கிய அம்சத்தோடு ஒப்பிடும் போது, நிதி நலனுக்கான முக்கியத்துவம் குறைவாக இருந்தாலும், இதை தீர்ப்பதற்கான திட்டங்களை நிறுவனங்கள் வகுத்து வருகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|