பதிவு செய்த நாள்
02 டிச2018
23:38
பங்குச்
சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு கவலை அளித்தாலும், இதை முதலீட்டாளர்கள்
சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என, வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த
சில மாதங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கமான போக்கை எதிர்கொண்டு
வருகிறது. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள
பணமாக்கும் தன்மை (லிக்விடிட்டி) பிரச்சனை, ஐ.எல்., & எப்.எஸ்., சிக்கல் உள்ளிட்ட உள்நாட்டு காரணங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தக போர் சூழல், அமெரிக்க வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு, பிரெக்ஸ்ட், கச்சா எண்ணெய் விலை போக்கு உள்ளிட்ட சர்வதேச காரணங்களும் தாக்கத்தை செலுத்தி வருகின்றன.
வளரும் இந்தியா
சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தாலும், முதலீடு செய்வதில் இருந்து விலகி நிற்காமல் இந்த போக்கை சாதகமாக்கி கொள்ளலாம். எல்லா வகையான சூழல்களிலும் சந்தையில் ஏற்ற இறக்கம் இருந்து
வருகின்றன. எனினும், ஏற்ற இறக்கத்திற்கு பிறகு சந்தை மீண்டு வந்திருப்பதையும் உணரலாம் என, வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
2008 பொருளாதார தேக்க நிலையின் போது சென்செக்ஸ், 60 சதவீதம் சரிந்தாலும், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சென்செக்ஸ், 150 சதவீதமாக மீண்டது.மேலும், இந்திய வளர்ச்சியின் அடிப்படை அம்சங்கள் வலுவாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்திய வளர்ச்சிக்கு நீண்ட கால அம்சங்கள் இருப்பதாகவும் கருதப்படுகிறது. இத்தகைய சூழலில், முதலீட்டாளர்கள் குறுகிய கால நிகழ்வான ஏற்ற இறக்கம் பற்றி அதிகம் கவலைப்படாமல், நீண்ட கால
அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்கின்றனர்.
நீண்ட கால அணுகுமுறையை மனதில் வைத்து, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு உத்தியை வகுத்துக்கொள்ள வேண்டும்.உண்மையில் சந்தை ஏற்ற இறக்கத்தை நண்பனாக்கி கொண்டு, முதலீட்டாளர்கள் பலன் பெற முடியும் என்றும் வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவுவது இயல்பானது என்பதால், இதை கண்டு அச்சம் கொள்ளாமல், விலை குறைந்திருக்கும் மதிப்பு வாய்ந்த பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு பங்குகளின் அடிப்படை பற்றிய முறையான ஆய்வு அவசியம். அதே நேரத்தில், ஏற்ற இறக்கமான சூழலில், சந்தையின் போக்கை கணித்து அதற்கேற்ப பங்குகளை வாங்குவது அல்லது விற்கும் முடிவை தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
எஸ்.ஐ.பி., முதலீடு
அடிப்படையில் வலுவான அம்சங்கள் கொண்ட, நல்ல நிர்வாகம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புள்ள பங்குகளில் கவனம் செலுத்தலாம். குறிப்பாக நீண்ட கால நோக்கத்தை மனதில் கொண்டால், அதற்கேற்ற பலன் பெறும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த10ஆண்டுகளின் ஏற்ற இறக்கங்களை மீறி, பிரிட்டானியா, மாருதி மற்றும் விஐபி இண்டஸ்டிரிஸ் போன்ற நிறுவன பங்குகள்
அதிக பலன் தந்திருப்பதை வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
ஏற்ற இறக்கம் புதிய இயல்பு நிலை என்பதால், அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்கின்றனர்.பொதுவாக பங்குச்சந்தை முதலீட் டிற்கு, சீரான முதலீட்டு உத்தியான சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மண்ட் பிளான் எனும் எஸ்.ஐ.பி., முறை ஏற்றதாக கருதப்படுகிறது. ஏற்ற
இறக்கமான சூழலில் எஸ்.ஐ.பி., முதலீட்டை நிறுத்திவிடாமல் தொடர்வது
அவசியம். எஸ்.ஐ.பி., முதலீட்டின் மூலம், பங்குகள் குறையும் போது அதிக
யூனிட் வாங்குவது, அதிகமாகும்போது குறைவான யூனிட் வாங்குவதன் மூலம் விலை சராசரியின் பலனை பெறலாம்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|