‘வர்த்தக எல்லைகளை திறக்கணும்’ ‘வர்த்தக எல்லைகளை திறக்கணும்’ ...  ‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை ‘ஜிம் – 2’வில், 200 ஒப்பந்தம்:அதிகாரிகள் நம்பிக்கை ...
தயாரிப்பு துறை 11 மாதங்கள் காணாத வளர்ச்சி: புதிய, ‘ஆர்டர்’கள், வேலைவாய்ப்பு அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2018
04:06

புதுடில்லி:கடந்த நவம்பரில், புதிய, ‘ஆர்டர்’கள் அதிக அளவில் குவிந்ததால், தயாரிப்பு துறையின் உற்பத்தி, 11 மாதங்களில் காணாத வளர்ச்சியை கண்டுள்ளது.இது குறித்து, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, அக்டோபரை விட, நவம்பரில் அதிகரித்துள்ளது. அதனால், இவ்வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 54.0 புள்ளியாக உயர்ந்துள்ளது.
இது, அக்டோபரில், 53.1 ஆக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும். இதன்படி, தயாரிப்பு துறை, தொடர்ந்து, 16 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது.தயாரிப்பு நிறுவனங்களுக்கு, முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு, புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன. குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து அதிக ஆர்டர்களை, தயாரிப்பு நிறுவனங்கள் பெற்று உள்ளன.அதனால், தயாரிப்பு துறையின் உற்பத்தி விகிதம், 2016, அக்டோபருக்கு பின், இந்தாண்டு நவம்பரில் தான், அதிக ஏற்றம் கண்டுள்ளது.பெருகி வரும் தேவைமக்களின் தேவை பெருகி வருவதும், சிறப்பான விளம்பர உத்திகளும், பொருட்களின் கவர்ச்சிகரமான விலையும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சிக்கு வழி கோலியுள்ளது.உள்நாட்டில், தயாரிப்பு பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது; ஏற்றுமதியும் உயர்ந்துள்ளது.இந்தாண்டு ஜூன் முதல், ஒட்டுமொத்த அளவில், புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்து வருகின்றன. முக்கிய ஏற்றுமதி சந்தைகளில், மொத்த ஆர்டர்களை, தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவிற்கு பெற்றுள்ளன.அதனால், உற்பத்தியை அதிகரித்து, குறித்த காலத்தில் பொருட்களை சப்ளை செய்ய, கூடுதலாக பணியாளர்களை அமர்த்தியுள்ளன.அக்டோபரில், தயாரிப்பு துறையின் வேலைவாய்ப்பு வளர்ச்சி சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், நவம்பரில், முந்தைய ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.இத்தகைய சூழல், தயாரிப்பு துறை நிறுவனங்களிடம், எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இது, அக்டோபரில் காணப்பட்டதை விட, நவம்பரில், நிறுவனங்களிடம் ஆர்டர், உற்பத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளது.
அடுத்த ஓராண்டிற்கு, சந்தை நிலவரத்தில் மேலும் முன்னேற்றம் காணப்படும் என, தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.இதையடுத்து, அடுத்த ஆண்டுக்கான, சந்தைப்படுத்தும் நடவடிக்கையை துவக்கிவிட்டன. மேலும், ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காகவும், முதலீடுகளை அதிகரிக்க முனைந்துள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.குவிந்த புதிய ஆர்டர்கள்ஆகஸ்டில், தயாரிப்பு துறை வளர்ச்சியில் சற்று தொய்வு காணப்பட்டது. ஆனால், நவம்பரில் இத்துறை, 11 மாதங்கள் காணாத உற்பத்தி வளர்ச்சியை கண்டுள்ளது. வேலைவாய்ப்புகளும், ஆறு ஆண்டுகள் காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன. குறிப்பாக, பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் வர்த்தகம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு துவக்கத்தில், பொருட்களுக்கான தேவைப்பாடு குறைந்திருந்தது.
இந்த நிலை, நவம்பரில் மாறியுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வால், பொருட்களின் விற்பனை விலை உயர்ந்துள்ள நிலையிலும், தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளன.பாலியானா டி லிமா, தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்எட்டு பிரிவுகள்தயாரிப்பு துறையில், அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக், உணவு மற்றும் பானங்கள் உட்பட, எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களிடம், நிக்கி – மார்கிட் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)