பதிவு செய்த நாள்
22 டிச2018
23:23

புதுடில்லி: மத்திய அரசு, நாளை வெளியிடும், தங்க சேமிப்பு பத்திரத்திற்கு, 1 கிராம், 3,119 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்துள்ளது. இதில், வரும், 28ம் தேதி வரை, முதலீடு செய்யலாம். வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 3,069 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.ஐந்தாம் கட்ட, தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை, 2019, ஜன., 14ல் துவங்கி, 18ம் தேதி முடிவடையும். இறுதிக் கட்ட விற்பனை, பிப்., 4 – -8 வரை நடைபெறும்.ஆவண முதலீடுமத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015, நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.ஒருவர், ஏப்., – மார்ச் வரையிலான ஒரு நிதியாண்டில், குறைந்தபட்சம், 1 கிராம் முதல், அதிகபட்சம், 500 கிராம் வரை, தங்க சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்யலாம்.எட்டு ஆண்டு முதிர்வு காலம் உள்ள இந்த சேமிப்பு பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டிற்கு, ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி வீதம், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|